ADDED : ஜன 15, 2024 02:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேலுார்: ''தமிழகம் முழுதும் அனுமதியின்றி செயல்படும் கல் குவாரிகள் மற்றும் காலாவதி கல்குவாரிகள், ஒரு வாரத்துக்குள் மூடப்படும்,'' என, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
வேலுார் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த கெங்கநல்லுாரில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவில் பங்கேற்ற அவர் கூறியதாவது:
தமிழகம் முழுதும், காலாவதியான மற்றும் அனுமதியின்றி செயல்படும் அனைத்து கல் குவாரிகளும், இன்னும் ஒரு வாரத்திற்குள் முழுதுமாக மூடப்படும்.
வேலுார் திருவள்ளுவர் பல்கலை ஊழல் குறித்து, பேராசிரியர்கள், பல்கலை பணியாளர்கள் என்னை சந்தித்து புகார் தெரிவித்தால் நடவடிக்கை எடுப்பேன்.
இவ்வாறு, அவர் கூறினார்.