ADDED : அக் 25, 2025 12:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, பல்வேறு தலைப்புகளில் கதை சொல்லும் போட்டிகள் நடத்தப்பட உள்ளன .
மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், மூன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கான கதை சொல்லும் போட்டி, நவ., 6 முதல் துவங்க உள்ளது.
வகுப்பு வாரியாக கொடுக்கப்பட்டுள்ள தலைப்பில், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில், இரண்டு முதல் நான்கு நிமிடங்கள் வரை மாணவர்கள் கதைகளை கூறலாம்.
கதை சொல்லும் வீடியோவை, பள்ளி வாயிலாக, http://cbseacademic.nic.in என்ற இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும். முதலில், மண்டல அளவில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்படும்.
தேசிய போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.

