sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

'ஸ்ட்ராபெரி க்விக் மெத்' விற்பனை பள்ளி, கல்லுாரிகள் அருகே 'ரெய்டு'

/

'ஸ்ட்ராபெரி க்விக் மெத்' விற்பனை பள்ளி, கல்லுாரிகள் அருகே 'ரெய்டு'

'ஸ்ட்ராபெரி க்விக் மெத்' விற்பனை பள்ளி, கல்லுாரிகள் அருகே 'ரெய்டு'

'ஸ்ட்ராபெரி க்விக் மெத்' விற்பனை பள்ளி, கல்லுாரிகள் அருகே 'ரெய்டு'


ADDED : பிப் 08, 2025 02:02 AM

Google News

ADDED : பிப் 08, 2025 02:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:இலங்கையை சேர்ந்த சர்வதேச போதைப்பொருள் கடத்தல் மன்னன் கஞ்சிபாணி இம்ரான் தலைமையிலான கும்பல், தமிழகத்திற்கு, 'மெத் ஆம்பெட்டமைன்' போதைப்பொருளை வினியோகம் செய்து வருகிறது.

சென்னையில் இந்த கும்பலை சேர்ந்த மூவர் கைதாகினர். துப்பாக்கி மற்றும் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.தொடர் விசாரணையில், டில்லியில் இருந்து மெத் ஆம்பெட்டமைன் கடத்தி வரப்படுவது தெரியவந்துள்ளது. தற்போது, இக்கும்பலை சேர்ந்தோர், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மற்றும் தனியார் நிறுவன ஊழியர்களை குறிவைத்து, 'ஸ்ட்ராபெரி க்விக் மெத்' எனப்படும், போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வருவது, போலீசாருக்கு தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக, மாநிலத்தின் பல பகுதிகளில், பள்ளி, கல்லுாரிகள் அருகே உள்ள கடைகளில் நேற்று, சோதனையில் ஈடுபட்டனர்.

போலீசார் கூறியதாவது:

கடந்த, 2007ல், ஸ்ட்ராபெரி க்விக் மெத் போதைப்பொருள் புழக்கத்திற்கு வந்து விட்டது. இந்த போதைப்பொருளில், ஸ்ட்ராபெரி வாசம் வீசும். இளம் சிவப்பு நிறத்தில், பஞ்சு மிட்டாயில் பொம்மை செய்தால், எப்படி இருக்குமோ அப்படி இருக்கும். இனிப்பு சுவையுடன் வாயில் போட்டவுடன், 'டப்' என வெடிக்கும்.

இந்த சத்தத்திற்காகவே பள்ளி, கல்லுாரி மாணவர்கள் வாங்குவர். மெத் ஆம்பெட்டமைன் கலந்து இருப்பதால் போதை காரணமாக, அடிக்கடியும், அதிகமாகவும் வாங்க துாண்டும்.

இந்த போதைப்பொருள் விற்பனை கும்பலை தேடி வருகிறோம். தமிழகத்தில் இந்த போதைப்பொருளை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us