sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மாணவி பாலியல் பலாத்கார வழக்கு: தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை

/

மாணவி பாலியல் பலாத்கார வழக்கு: தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை

மாணவி பாலியல் பலாத்கார வழக்கு: தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை

மாணவி பாலியல் பலாத்கார வழக்கு: தொழிலாளிக்கு 7 ஆண்டு சிறை


ADDED : அக் 23, 2024 05:48 AM

Google News

ADDED : அக் 23, 2024 05:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : நர்சிங் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், தொழிலாளிக்கு கடலுார் கோர்ட்டில் 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

கடலுார் மாவட்டம், திட்டக்குடி அடுத்த பாசிகுளத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை,38; கூலி்த்தொழிலாளி. திருமணமாகி 2 பிள்ளைகள் உள்ளனர். இவருக்கு கடந்த 2015ம் ஆண்டு நர்சிங் படித்து வந்த 19 வயது மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டது.

திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி மாணவியை பலாத்காரம் செய்தார். இதனால் மனமுடைந்த மாணவி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார்.

அவரை குடும்பத்தினர் மீட்டு கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

இதுகுறித்த புகாரின் பேரில், கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து ஏழுமலையை கைது செய்து, கடலுார் மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

வழக்கு விசாரணை நேற்று முடிந்தது. நீதிபதி (பொறுப்பு) லட்சுமி ரமேஷ், இவ்வழக்கில் தொடர்புடைய ஏழுமலைக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். அரசு தரப்பில் வழக்கறிஞர் வளர்மதி ஆஜரானார்.






      Dinamalar
      Follow us