sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 10, 2025 ,கார்த்திகை 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 மருத்துவ கவுன்சில் அலட்சியம்; மாணவர்கள் கடும் அதிருப்தி

/

 மருத்துவ கவுன்சில் அலட்சியம்; மாணவர்கள் கடும் அதிருப்தி

 மருத்துவ கவுன்சில் அலட்சியம்; மாணவர்கள் கடும் அதிருப்தி

 மருத்துவ கவுன்சில் அலட்சியம்; மாணவர்கள் கடும் அதிருப்தி


ADDED : டிச 10, 2025 06:28 AM

Google News

ADDED : டிச 10, 2025 06:28 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'தற்காலிக பதிவு சான்றிதழ் வழங்காமல், மருத்துவ கவுன்சில், எங்களை தொடர்ந்து அலட்சியப்படுத்தி வருகிறது' என, வெளிநாடுகளில் மருத்துவம் பயின்ற மாணவர்கள், புகார் தெரிவித்தனர்.

இது குறித்து, தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்க, வெளிநாட்டு பிரிவு செயலர் வசந்த் பிலிப் அபிஷேக் கூறியதாவது:


வெளிநாடுகளில் மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு தற்காலிக சான்றிதழ் வழங்க, தொடர்ந்து காலம் தாழ்த்தி வருகின்றனர். மேலும், வெளிநாடுகளில் படித்தவர் களுக்கு, மூன்று ஆண்டுகள் வரை பயிற்சி கட்டாயம் என்கின்றனர்.

குறிப்பாக, மாவட்ட அரசு மருத்துவமனைகளில், வெளிநாடுகளில் படித்தவர்கள், பயிற்சி டாக்டராக பணியாற்றலாம் என, தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி வழங்கியது.

அதை நடைமுறைப்படுத்தாமல், தமிழக மருத்துவ கவுன்சில் உள்நோக்கத்துடன் செயல்படுகிறது. அதேபோல், 11 புதிய கல்லுாரிகளிலும், வெளிநாடுகளில் படித்த மாணவர்கள் பயிற்சி பெற அனுமதி வழங்குவதில்லை.

தமிழ்நாடு மருத்துவ கவுன்சில், வெளிநாடுகளில் மருத்துவ பட்டம் பெற்றவர்களை, அவமானப்படுத்தும் வகையில், அலட்சியமாகவும், பாரபட்சமாகவும் செயல்படுகிறது.

இதை கண்டித்து ஜன., 6ம் தேதி, சென்னையில் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us