sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

நாட்டுக்கோழி பண்ணை அமைக்க மானியம்

/

நாட்டுக்கோழி பண்ணை அமைக்க மானியம்

நாட்டுக்கோழி பண்ணை அமைக்க மானியம்

நாட்டுக்கோழி பண்ணை அமைக்க மானியம்


ADDED : மார் 23, 2025 01:31 AM

Google News

ADDED : மார் 23, 2025 01:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'அரசு மானியத்தில், கால்நடை பண்ணை அமைக்க விண்ணப்பிக்கலாம்' என, கால்நடை பராமரிப்புத்துறை அறிவித்துள்ளது.

அதன் அறிக்கை:

தமிழகத்தில், புதிய கால்நடை பண்ணைகள் அமைக்க, அரசு நிதி உதவி வழங்கி வருகிறது. அதன்படி, நாட்டுக்கோழி பண்ணையுடன் கூடிய குஞ்சு பொரிப்பகம் அமைக்க, 25 லட்சம் ரூபாய் வரையும், செம்மறி ஆடு, வெள்ளாடு பண்ணை அமைக்க, 10 லட்சம் முதல் 50 லட்சம் ரூபாய் வரையும் மானியம் வழங்கப்படுகிறது.

பன்றி வளர்ப்பு பண்ணை அமைக்க 15 லட்சம் முதல் 30 லட்சம் ரூபாய் வரை, வைக்கோல், ஊறுகாய்புல், மொத்த கலப்பு உணவு, தீவன தொகுதி மற்றும் தீவன சேமிப்பு வசதிகள் பண்ணை அமைக்கவும், தொழில் முனைவோருக்கு மானியம் வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தில், தனிநபர், சுயஉதவி குழுக்கள், விவசாய உற்பத்தியாளர்கள் அமைப்பு, விவசாய கூட்டுறவுகள், கூட்டு பொறுப்பு சங்கங்கள், https://nlm.udyamitra.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விபரங்களை, http://www.tnlda.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us