வெப்பத்தை தணிக்க வருகிறது கோடை மழை: வானிலை மையம் அறிக்கை
வெப்பத்தை தணிக்க வருகிறது கோடை மழை: வானிலை மையம் அறிக்கை
ADDED : மார் 17, 2024 02:06 PM

சென்னை: தமிழகத்தில் வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் வரும் மார்ச் 20ம் தேதி முதல் மார்ச் 22ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகம், புதுச்சேரி மற்றும காரைக்கால் பகுதிகளில் இன்று (மார்ச் 17) முதல் மார்ச் 19ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் மார்ச் 20ம் தேதி முதல் மார்ச் 22ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஒரிரு இடங்களில் அசவுகரியம் ஏற்படலாம்.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

