sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

வந்தாச்சு கோடை சீசன்; ஊட்டி மலை ரயில் சேவை இன்று முதல் தொடக்கம்

/

வந்தாச்சு கோடை சீசன்; ஊட்டி மலை ரயில் சேவை இன்று முதல் தொடக்கம்

வந்தாச்சு கோடை சீசன்; ஊட்டி மலை ரயில் சேவை இன்று முதல் தொடக்கம்

வந்தாச்சு கோடை சீசன்; ஊட்டி மலை ரயில் சேவை இன்று முதல் தொடக்கம்


UPDATED : மார் 28, 2025 10:31 AM

ADDED : மார் 28, 2025 10:19 AM

Google News

UPDATED : மார் 28, 2025 10:31 AM ADDED : மார் 28, 2025 10:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்: கோடை கால சீசன் தொடங்க உள்ள நிலையில், ஊட்டி சிறப்பு மலை ரயில் இன்று முதல் ஜூலை 6ம் தேதி வரை இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு தினசரி நீலகிரி மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. யூனஸ்கோ அந்தஸ்து பெற்ற நூறாண்டு பழமையான, ஊட்டி மலை ரயிலில், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள், ஆர்வமுடன் பயணம் செய்து வருகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டும் கோடை சீசனுக்கு, தென்னக ரயில்வே நிர்வாகம், ஊட்டிக்கு சிறப்பு மலை ரயிலை இயக்கி வருகிறது. அதன்படி, இந்தாண்டு கோடை கால சீசனுக்கு, மேட்டுப்பாளையத்தில் இருந்து, ஊட்டிக்கு இன்று முதல் சிறப்பு மலை ரயிலை ரயில்வே நிர்வாகம் இயக்கியது.

மேட்டுப்பாளையத்தில் இருந்து ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமையும், ஞாயிற்றுக்கிழமையும், காலை, 9:10 மணிக்கு இயக்கப்பட உள்ளது. அதே போன்று ஊட்டியில் இருந்து ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமையும், திங்கட்கிழமையும் காலை, 11:25 மணிக்கு புறப்பட்டு மேட்டுப்பாளையத்திற்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

இந்த ஊட்டி சிறப்பு மலை ரயில் மார்ச், 28ம் தேதி முதல் ஜூலை, 6ம் தேதி வரை இயக்கப்படும். இன்று காலை, 9:10 மணிக்கு துவங்கிய, ஊட்டி சிறப்பு மலைரயிலில், கோவையைச் சேர்ந்த தனியார் பள்ளி மாணவ, மாணவியர் உட்பட, 180க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் உற்சாகமுடன் பயணம் செய்தனர்.






      Dinamalar
      Follow us