sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 02, 2026 ,மார்கழி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

நகராட்சியுடன் கிராம ஊராட்சிகள் இணைப்பு நிறுத்தி வைப்பு  

/

நகராட்சியுடன் கிராம ஊராட்சிகள் இணைப்பு நிறுத்தி வைப்பு  

நகராட்சியுடன் கிராம ஊராட்சிகள் இணைப்பு நிறுத்தி வைப்பு  

நகராட்சியுடன் கிராம ஊராட்சிகள் இணைப்பு நிறுத்தி வைப்பு  


ADDED : ஜூலை 31, 2025 12:51 AM

Google News

ADDED : ஜூலை 31, 2025 12:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை:கிராம ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைக்கும் திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி பகுதியில் உள்ள, 12,000க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகளில், 375 கிராம ஊராட்சிகள் நகராட்சிகளுடன் இணைக்கப்பட்டும், முதல் தரத்தில் உள்ள கிராம ஊராட்சிகளுடன், சில ஊராட்சிகளை இணைத்து, பேரூராட்சிகளாக தரம் உயர்த்தியும் அறிவிக்கப்பட்டது.

ஆனால், மத்திய அரசின் நிதியின் மூலம் செயல்படும் தேசிய வேலை உறுதி திட்ட பணிகள், தமிழக அரசின் கனவு இல்ல திட்ட வீடுகள் போன்ற கிராம ஊராட்சிகளுக்கு கிடைத்து வந்த அனைத்து சலுகைகளும், நகராட்சியுடன் இணைக்கப்பட்ட கிராமங்கள், பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட கிராம ஊராட்சிகளுடன் இணைந்த கிராமங்களுக்கு கிடைக்காத சூழல் எழுந்தது.

இதனால் அரசின் மீது கிராம மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டது. சட்டசபை தேர்தலின் போது, இது அரசுக்கு தலைவலியை ஏற்படுத்தும் என கருத்துகள் எழுந்தன.

இதையடுத்து நகராட்சி களுடன் கிராம ஊராட்சிகள் இணைப்பு, கிராம ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்தும் அறிவிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைத்து அரசு உத்தரவிட்டுள்ளது.

ஊரக வளர்ச்சித்துறை அதிகாரி கூறுகையில், 'அரசின் கனவு இல்லம் திட்டத்திற்கு, இரண்டாவது கட்டமாக நிதி ஒதுக்கியுள்ளனர். ஆனால், இத்திட்ட நிதி நகராட்சியுடன் இணைந்த கிராம ஊராட்சி, பேரூராட்சியாக தரம் உயர்த்திய கிராம ஊராட்சிகளுக்கு ஒதுக்கப்படவில்லை.

'இதற்கு மக்களிடம் எதிர்ப்பு கிளம்பியதால், கிராம ஊராட்சிகள் இணைப்பு, பேரூராட்சியாக தரம் உயர்த்தும் திட்டங்களை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர்' என்றார்.






      Dinamalar
      Follow us