ADDED : ஜூன் 28, 2025 07:07 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தாம்பரம் - திருச்சி இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில்கள், ஜூலை, 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை:
பயணியர் தேவையை கருத்தில் வைத்து, சிறப்பு ரயில்களின் சேவைகள் நீட்டிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தாம்பரம் - திருச்சி சிறப்பு ரயில்களின் சேவை, ஜூலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தாம்பரம் - திருச்சி இடையே வாரந்தோறும், செவ்வாய், புதன், வெள்ளி, சனி, ஞாயிறுகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில்கள், ஜூலை 1 முதல் 30ம் தேதி வரை, இரு மார்க்கத்திலும் நீட்டித்து இயக்கப்பட உள்ளன. இந்த சிறப்பு ரயில்களுக்கான, டிக்கெட் முன்பதிவு துவங்கி உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.