sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தி.மு.க., கொடி கட்டிய காரில் பெண்களை துரத்தியது யார்; தேடிக் கொண்டே இருக்கிறது தாம்பரம் போலீஸ்!

/

தி.மு.க., கொடி கட்டிய காரில் பெண்களை துரத்தியது யார்; தேடிக் கொண்டே இருக்கிறது தாம்பரம் போலீஸ்!

தி.மு.க., கொடி கட்டிய காரில் பெண்களை துரத்தியது யார்; தேடிக் கொண்டே இருக்கிறது தாம்பரம் போலீஸ்!

தி.மு.க., கொடி கட்டிய காரில் பெண்களை துரத்தியது யார்; தேடிக் கொண்டே இருக்கிறது தாம்பரம் போலீஸ்!

49


UPDATED : ஜன 30, 2025 05:38 PM

ADDED : ஜன 29, 2025 07:46 PM

Google News

UPDATED : ஜன 30, 2025 05:38 PM ADDED : ஜன 29, 2025 07:46 PM

49


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தி.மு.க., கொடி கட்டிய காரில் பெண்களை துரத்திய கும்பலை தேடி வருவதாக தாம்பரம் போலீசார் தெரிவித்துள்ளனர். காரில் மோதியதாக வெளியான தகவலுக்கு, சம்பந்தப்பட்ட பெண்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

சென்னை அடுத்த, முட்டுக்காடு பாலம் அருகே ஜன.25ம் தேதி இரவில் பெண்கள் பயணித்த கார் ஒன்றை, 2 கார்களில் வந்த வாலிபர்கள் துரத்தியுள்ளனர். அதில் ஒரு காரில் தி.மு.க., கொடி கட்டப்பட்டு இருந்திருக்கிறது. இதைக்கண்ட பெண்கள் அச்சத்தில் உறைந்து போயினர். ஒரு கட்டத்தில் பயந்து போய், பீதியில் அலறிய பெண்கள் தாங்கள் வந்த காரை நிறுத்தாமல் சென்றுள்ளனர். பின்னால் 2 கார்களில் அதிவேகத்தில் துரத்திக் கொண்டு வந்த வாலிபர்கள், முந்திச்சென்று சாலையை மறித்துள்ளனர்.

காரை ரிவர்ஸ் எடுக்க முயற்சித்த போதும், விடாமல் துரத்தி இருக்கின்றனர். ஒரு கட்டத்தில் பயந்து போய் பெண்கள் காரை நிறுத்த, அவர்களை நோக்கி வேகமாக வந்த வாலிபர்கள், கார் கண்ணாடியை ஆவேசமாக தட்டி மிரட்டியுள்ளனர்.

காரில் இருந்த பெண்களில் ஒருவர், தமது மொபைல்போனில் நடந்த அனைத்தையும் வீடியோவாக பதிவு செய்திருக்கிறார். அவர்கள் பயத்தில் தங்கள் உறவினர்கள், நண்பர்களுக்கு போன் செய்யும்படி கூறும் உரையாடலும் அந்த வீடியோவில் பதிவாகி இருக்கிறது.

இந்த வீடியோ இணையதளங்களில் வெகு வேகமாக பரவிய நிலையில், பல்வேறு அரசியல் கட்சியினரும், போலீசாருக்கும், அரசுக்கும் கடும் கண்டனம் தெரிவித்தனர். 'காரில் தி.மு.க., கொடி கட்டியிருப்பது, குற்றம் செய்வதற்கான லைசென்ஸா' என்றும் கேள்வி எழுந்தது.

நடந்த சம்பவம் பற்றி பாதிக்கப்பட்ட பெண் கானாத்தூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் மனு அளித்துள்ளார். காரில் பின் தொடர்ந்து வந்த கும்பல், தங்களின் வீடு வரை பின்தொடர்ந்து வந்து பயமுறுத்தியதாகவும் குறிப்பிட்டு உள்ளார்.

இதனிடையே, பெண்கள் வந்த கார், வாலிபர்களின் காரை இடித்து விட்டு நிற்காமல் சென்றதால் தான், துரத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகின. அதற்கு மறுப்பு தெரிவித்துள்ள அந்த பெண், 'நாங்கள் எந்த காரையும் இடிக்கவில்லை. அங்குள்ள சி.சி.டி.வி., காட்சிகளை ஆய்வு செய்தால் உண்மை தெரியவரும்', எனக் கூறியுள்ளார்.

இந்த நிலையில், சம்பவம் தொடர்பாக 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தாம்பரம் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், குற்றவாளிகளை கைது செய்யவும், அவர்களின் கார்களை பறிமுதல் பண்ணவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீசார் கூறியுள்ளனர். ஈ.சி.ஆரில் உள்ள சி.சி.டி.வி., காட்சிகளை ஆய்வு செய்து, விசாரணை செய்வதற்காக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us