sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கவர்னருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு

/

கவர்னருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு

கவர்னருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு

கவர்னருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு

1


ADDED : அக் 04, 2025 04:27 PM

Google News

1

ADDED : அக் 04, 2025 04:27 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: கும்பகோணம் பல்கலை தொடர்பான மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கவர்னருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் கும்பகோணத்தில் பல்கலை அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக, கடந்த ஏப்., மாதம் சட்டசபையில் மசோதா ஒன்றையும் தமிழக அரசு நிறைவேற்றியது. அந்த மசோதாவில் பல்கலை வேந்தராக முதல்வரும், இணைவேந்தராக உயர்கல்வித்துறை அமைச்சரும் செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டிருந்தார். வேந்தரின் அனுமதியில்லாமல் கவுரவ பட்டங்களை வழங்க முடியாது, எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

கவர்னரின் ஒப்புதலுக்காக இந்த மசோதா அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், கவர்னர் ரவி மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார். இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

மேலும், கவர்னரின் முடிவை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல், அதனை ஜனாதிபதிக்கு கவர்னர் அனுப்பி வைத்திருப்பது சட்டப்பேரவையின் முடிவுக்கு எதிரானது என்றும், இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிட்டு உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us