sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

துணைவேந்தர் தேடுதல் குழு அமைத்தது தமிழக அரசு

/

துணைவேந்தர் தேடுதல் குழு அமைத்தது தமிழக அரசு

துணைவேந்தர் தேடுதல் குழு அமைத்தது தமிழக அரசு

துணைவேந்தர் தேடுதல் குழு அமைத்தது தமிழக அரசு


ADDED : மே 03, 2025 02:12 AM

Google News

ADDED : மே 03, 2025 02:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:தஞ்சை தமிழ் பல்கலை, அம்பேத்கர் சட்டப் பல்கலை துணை வேந்தர்களை நியமிப்பதற்கான தேடுதல் குழுவை, தமிழக அரசு அமைத்துள்ளது.

தமிழக பல்கலைகளுக்கு துணை வேந்தர்களை நியமிப்பதில், தமிழக அரசுக்கும், கவர்னருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்தது. இதனால், தமிழக அரசு அமைத்த துணை வேந்தர் தேடுதல் குழுவுக்கு ஒப்புதல் அளிக்காமல், பல்கலை மானியக்குழு பிரதிநிதியை சேர்த்து, கவர்னர் புதிய பட்டியல் அனுப்பினார்.

இந்நிலையில், தமிழக அரசு அனுப்பிய, 10 மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காதது குறித்த வழக்கில், அனைத்து மசோதாக்களுக்கும் உச்ச நீதிமன்றம் ஒப்புதல் வழங்கியது.

இதைத்தொடர்ந்து, தஞ்சை தமிழ் பல்கலை மற்றும் சென்னை அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கான துணைவேந்தர்களை நியமிப்பது குறித்த தேடுதல் குழு அமைத்துள்ள தகவலை, தமிழக அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது.

அதில், அம்பேத்கர் சட்டப் பல்கலை துணை வேந்தர் தேடுதல் குழுவில், ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் மூன்று பேரும், தஞ்சை தமிழ் பல்கலை துணை வேந்தர் தேடுதல் குழுவில், நீதிபதி வாசுகி தலைமையில், ஐந்து பேரும் இடம் பெற்றுள்ளனர்.






      Dinamalar
      Follow us