sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

'தமிழகம் 60 சதவீதம் நகரமயமான மாநிலம்'

/

'தமிழகம் 60 சதவீதம் நகரமயமான மாநிலம்'

'தமிழகம் 60 சதவீதம் நகரமயமான மாநிலம்'

'தமிழகம் 60 சதவீதம் நகரமயமான மாநிலம்'

1


ADDED : ஜூன் 12, 2025 01:23 AM

Google News

ADDED : ஜூன் 12, 2025 01:23 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:''தி.மு.க., அரசின் பல்வேறு நடவடிக்கையால், நாட்டிலேயே 60 சதவீதம் நகரமயமான மாநிலமாக, தமிழகம் உள்ளது,'' என, துணை முதல்வர் உதயநிதி பேசினார்.

நகராட்சி நிர்வாகத் துறை சார்பில், 399.81 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்பட்டுள்ள, 102 திட்டங்களை, துணை முதல்வர் உதயநிதி நேற்று, துவக்கி வைத்தார். மேலும், 957.63 கோடி ரூபாய் மதிப்பிலான, 108 பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

பின், உதயநிதி பேசியதாவது:

கருணாநிதி ஆட்சியில் சென்னை மட்டுமல்ல, மாநிலம் முழுதும் நகர்ப்புற வளர்ச்சிக்கான திட்டங்கள், கூட்டுக் குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. முதல்வர் ஸ்டாலின், சென்னை மேயராக இருந்தபோது, பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தினார்.

அதனால், சென்னையில் குடிநீர் பஞ்சம் கிடையாது; எங்கு பார்த்தாலும் மேம்பாலங்கள் இருக்கின்றன. மெட்ரோ ரயில் ஓடிக் கொண்டிருக்கிறது.

உள்ளாட்சி துறை, அமைச்சராக இருந்தபோது, தமிழக வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்களை முதல்வர் செயல்படுத்தினார். அதனால், 60 சதவீதம் அளவிற்கு நகரமயமான மாநிலமாக தமிழகம் உள்ளது.

மற்ற மாநிலங்களில் ஏதாவது ஒரு மாநகரம் மட்டுமே பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது. தமிழகத்தில் பரவலாக மாநகரங்கள் வளர்ச்சி பெற்று உள்ளன. சென்னையில் நீர்வழிப் பாதைகள், 58 கோடி ரூபாய் மதிப்பில் துார்வாரப்படும்.

அதேபோல், கன்னியாகுமரி, துாத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில், கூட்டுக் குடிநீர் திட்டங்கள், பாதாள சாக்கடை திட்டங்கள் துவங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் பேசினார்.

பஸ்சில் இலவசம்


தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில், மகளிர் சுய உதவிக் குழு தினத்தையொட்டி, மாநில அளவில் சிறப்பாக செயல்பட்டு வரும், 35 சுய உதவிக் குழுக்களுக்கு, துணை முதல்வர் உதயநிதி விருது வழங்கினார். தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ, 'மதி' லோகோவை வெளியிட்டதுடன், 33,312 சுய உதவிக் குழுக்களுக்கு, 3,130 கோடி ரூபாய் மதிப்பிலான வங்கி கடன் ஆணைகளை வழங்கினார்.
பின், உதயநிதி பேசியதாவது:தமிழகத்தில், 4.76 லட்சம் மகளிர் சுய உதவிக் குழுக்களில், 53.74 பெண்கள் உறுப்பினராக உள்ளனர். விரைவில், மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினருக்கான அடையாள அட்டைகள் வழங்கப்படும்.அந்த அட்டை கிடைக்கும் பட்சத்தில், சுய உதவிக் குழுவினர் தயாரிக்கும் பொருட்களை, கிராம மற்றும் நகர பஸ்களில் கட்டணமின்றி எடுத்துச் செல்லலாம். சட்டசபையில் முதல்வர் அறிவித்தபடி, மகளிர் உரிமைத் தொகை விரிவாக்க பணி துவங்கப்பட்டுள்ளது. விரைவில், தேதி அறிவிக்கப்பட்டு, விடுபட்டவர்களுக்கு உரிமைத் தொகை வழங்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.








      Dinamalar
      Follow us