ADDED : டிச 07, 2024 05:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார் : கேரளாவில் உள்ள முல்லைப் பெரியாறு அணையில், பராமரிப்பு பணி மேற்கொள்ள தளவாடப் பொருட்களை ஏற்றி சென்ற, தமிழக லாரிகளை கேரள வனத்துறை அனுமதிப்பதில்லை. டிச., 4ம் தேதி, அணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் இரண்டு லாரிகளில் தளவாடப் பொருட்களை எடுத்து சென்றனர்.
ஆனால், கேரள நீர் பாசனத் துறையின் அனுமதி கடிதம் இல்லை என கூறி, வள்ளக்கடவு சோதனைச்சாவடியில் அனுமதி மறுக்கப்பட்டு, லாரிகள் மூன்று நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
லாரிகளை அனுமதிக்க கோரி, கடந்த மூன்று நாட்களாக விவசாய சங்கத்தினர் லோயர்கேம்பிலும், வள்ளக்கடவு சோதனைச்சாவடி அருகேயும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.