sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

இணையவழி குற்றத்தடுப்பு தமிழக போலீசுக்கு 2ம் இடம்

/

இணையவழி குற்றத்தடுப்பு தமிழக போலீசுக்கு 2ம் இடம்

இணையவழி குற்றத்தடுப்பு தமிழக போலீசுக்கு 2ம் இடம்

இணையவழி குற்றத்தடுப்பு தமிழக போலீசுக்கு 2ம் இடம்


ADDED : அக் 15, 2025 01:26 AM

Google News

ADDED : அக் 15, 2025 01:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:இணையவழி குற்றங்களை தடுப்பது மற்றும் அது தொடர்பான சட்டங்களை அமலாக்கம் செய்வது தொடர்பான போட்டியில், தமிழக போலீஸ் அணி இரண்டாவது இடம் பிடித்துள்ளது.

கேரள மாநிலம் கொச்சியில், இணையவழி குற்றத்தடுப்பு மாநாடு இரண்டு நாட்கள் நடந்தது. மத்திய உள்துறை செயலர் கோவிந்த் மோகன், மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் அஜய் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாநாட்டில், இணையவழி குற்றத்தடுப்பு மற்றும் சட்ட அமலாக்கம் குறித்து கருத்தரங்கு நடந்தது.

இதில், போலீசார், வழக்கறிஞர்கள், இணையவழி குற்றத்தடுப்பு நிபுணர்கள் என, பல்வேறு தரப்பினர் பங்கேற்றனர். மாநாட்டில் இணையவழி குற்றத்தடுப்பு மற்றும் சட்ட அமலாக்கம் தொடர்பாக போட்டி நடத்தப்பட்டது.

தமிழக காவல் துறை சார் பில், இணையவழி குற்றப்பிரிவில் பணிபுரியும் விழுப்புரம் எஸ்.ஐ., ராஜசேகர், நாமக்கல் எஸ்.ஐ., பூர்ணிமா, வேலுார் எஸ்.ஐ., யுவராணி ஆகியோர் அடங்கிய அணி, இரண்டாம் இடம் பிடித்தது.

இவர்களுக்கு, மாநில இணையவழி குற்றப்பிரிவு தலைமையக கூடுதல் டி.ஜி.பி., சந்தீப் மிட்டல் மற்றும் பொறுப்பு டி.ஜி.பி., வெங்கடராமன் ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us