ADDED : அக் 15, 2025 01:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி:தென்காசி மாவட்டம் காசிதர்மத்தைச் சேர்ந்தவர் வினோத் குமார் 30. இவர் செப்., 29ல் சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்ததாக போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு, திருநெல்வேலி மத்திய சிறையில் விசாரணை கைதியாக இருந்தார்.
கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்தவர் நேற்று மதியம் சிறை பாத்ரூம் ஜன்னலில் துண்டைப் பயன்படுத்தி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பெருமாள்புரம் போலீசார் விசாரித்தனர்.