sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தமிழக அரசியல் பணக்காரர்கள் கையில் சென்றுவிட்டது பண்ருட்டி ராமச்சந்திரன் பேட்டி

/

தமிழக அரசியல் பணக்காரர்கள் கையில் சென்றுவிட்டது பண்ருட்டி ராமச்சந்திரன் பேட்டி

தமிழக அரசியல் பணக்காரர்கள் கையில் சென்றுவிட்டது பண்ருட்டி ராமச்சந்திரன் பேட்டி

தமிழக அரசியல் பணக்காரர்கள் கையில் சென்றுவிட்டது பண்ருட்டி ராமச்சந்திரன் பேட்டி


ADDED : பிப் 02, 2025 04:24 AM

Google News

ADDED : பிப் 02, 2025 04:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார் : தமிழக அரசியல் தற்போது பணக்காரர்கள் கையில் சென்றுவிட்டது என, முன்னாள் அமைச்சரும், மூத்த அரசியல்வாதியுமான பண்ருட்டி ராமச்சந்திரன் கூறினார்.

கடலுாரில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

அரசியல் தற்போது பணக்காரர்கள் கையில் சென்றுவிட்டது. இந்தியாவில் அதானி, அம்பானி உள்ளிட்ட சில, குடும்பங்கள் தான் நன்றாக உள்ளன. ஒரு குடும்பம் வாழ 9 குடும்பங்கள் கஷ்டப்படுகிறது. மத்திய பட்ஜெட் தாக்கல் செய்து என்ன பயன். தினந்தோறும் ராமேஸ்வரம் மீனவர்கள் தாக்கப்படுகின்றனர்.

பா.ஜ.,வில் அண்ணாமலைக்கே வேலையில்லாமல் போயிற்று. அந்த வேலையை கவர்னர் பார்த்து வருகிறார். எல்லோருக்கும் சம வாய்ப்பு கிடைக்க வேண்டும். பணக்காரர்களுக்கு கிடைக்கும் வாய்ப்பு ஏழையாக இருந்தாலும் திறமை இருந்தால் அவர்களுக்கும் கிடைக்க வேண்டும். அரசாங்கம் எல்லாருக்கும் பொதுவாக இருக்க வேண்டும்.

பரந்துார் விமான நிலையம் வேணும். அந்த நிலத்தை எடுத்துவிட்டால் அந்த மக்கள் எங்கு செல்வார்கள். அவர்களுக்கு சரியான மாற்று ஏற்பாடு செய்துவிட்டு நிலத்தை எடு.

நிலத்தை கொஞ்சம் கொஞ்சமாக மற்ற திட்டத்திற்கு கொடுத்துவிட்டால் உணவு சாப்பிடுவது எப்படி. எனவே இப்படிப்பட்ட நிலையை வளர்ச்சி என்று சொல்ல முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us