sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பெண் அதிகாரம் என்ற மாற்றத்தை நோக்கி தமிழகம்; முதல்வர் ஸ்டாலின்

/

பெண் அதிகாரம் என்ற மாற்றத்தை நோக்கி தமிழகம்; முதல்வர் ஸ்டாலின்

பெண் அதிகாரம் என்ற மாற்றத்தை நோக்கி தமிழகம்; முதல்வர் ஸ்டாலின்

பெண் அதிகாரம் என்ற மாற்றத்தை நோக்கி தமிழகம்; முதல்வர் ஸ்டாலின்

41


ADDED : ஜன 02, 2025 11:51 AM

Google News

ADDED : ஜன 02, 2025 11:51 AM

41


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: பெண் அடிமை என்ற நிலையில் இருந்து பெண் அதிகாரம் என்னும் மாற்றத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை சைதாப்பேட்டையில் மகளிர் திறன் மேம்பாடு மையத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த மையத்தின் மூலம் 18 வயது முதல் 40 வயதுடைய பெண்கள் வேலைவாய்ப்பு, சுய தொழில் செய்வதற்கு இந்த மையம் உதவும் என்று சொல்லப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: அண்ணா, கருணாநிதி வழியில், ஈ.வே.ராவின் கனவை நினைவாக்கும் விதமான திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அரசுப் பணிகளில் மகளிருக்கு இடஒதுக்கீடு, மகளிர் சுய உதவிக்குழுக்கள், சொத்தில் பெண்களுக்கு சமஉரிமை உள்ளிட்ட திட்டங்களை உதாரணமாக சொல்லலாம்.

பெண்கள் கல்வி அறிவை பெற வேண்டும் என்பதன் அடுத்த கட்டமாக, பெண்கள் உயர்கல்வி உறுதி செய்யும் விதமான திட்டங்களை உறுதி செய்து வருகிறோம். விடியல் பயணத் திட்டம், புதுமைப் பெண் திட்டம், தோழி விடுதி உள்ளிட்ட திட்டங்கள் உள்ளன. பெண்கள், அதிகாரம், உலக அறிவை பெற வேண்டும் என்பதற்காகத் தான் இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். பெண்கள் உயர்ந்தால் தான் ஒரு சமூகமே உயர்ந்து நிற்கும்.

பெண் அடிமை என்ற நிலையில் இருந்து பெண் அதிகாரம் என்னும் மாற்றத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். கொளத்தூரில் அனிதா அச்சீவர்ஸ் அகாடமி எனும் பெயரில் திட்டத்தை தொடங்கி, பெண்களுக்கு திறன் மேம்பாட்டு வளர்ச்சி பணிகளை கொடுத்து வருகிறோம், எனக் கூறினார்.






      Dinamalar
      Follow us