sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

முன்கூட்டியே வழக்கு போட்டிருந்தால் தமிழகத்துக்கு நிதி வந்திருக்கும்: பா.ம.க.,

/

முன்கூட்டியே வழக்கு போட்டிருந்தால் தமிழகத்துக்கு நிதி வந்திருக்கும்: பா.ம.க.,

முன்கூட்டியே வழக்கு போட்டிருந்தால் தமிழகத்துக்கு நிதி வந்திருக்கும்: பா.ம.க.,

முன்கூட்டியே வழக்கு போட்டிருந்தால் தமிழகத்துக்கு நிதி வந்திருக்கும்: பா.ம.க.,


ADDED : ஜூன் 11, 2025 03:33 AM

Google News

ADDED : ஜூன் 11, 2025 03:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை:


ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ், 2024 - 25ம் கல்வியாண்டுக்கான முதல் காலாண்டில், அதாவது கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான, 3 மாதங்களில், தமிழகத்திற்கு வழங்க வேண்டிய, 573 கோடி ரூபாயை, கடந்த ஆண்டு ஆகஸ்ட் வரை மத்திய அரசு வழங்கவில்லை.

இது தொடர்பான, வழக்கு விசாரணையின்போது, 'எவ்வளவு காலமாக, மத்திய அரசின் நிதி வரவில்லை; எப்போது வழக்கு தொடர்ந்தீர்கள்' என்று, உச்ச நீதிமன்றத்தின் கோடை விடுமுறை கால நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த தமிழக அரசின் வழக்கறிஞர், 'கடந்த ஆண்டு முதல் நிதி வரவில்லை; கடந்த மே 20-ம் தேதிதான் வழக்கு தொடர்ந்தோம்' என்றார்.

அதன் அடிப்படையில், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க, உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது. பா.ம.க., வலியுறுத்தியவாறு, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலேயே வழக்கு தொடர்ந்திருந்தால், அடுத்த சில மாதங்களில், இந்த வழக்கு முழுமையாக விசாரிக்கப்பட்டு, அதில் தீர்ப்பு வந்திருக்கும்; தமிழகத்திற்கான நிதி கிடைத்திருக்கும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us