sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

டாவோஸ் மாநாட்டில் தமிழகத்திற்கு தோல்வி: அன்புமணி குற்றச்சாட்டு

/

டாவோஸ் மாநாட்டில் தமிழகத்திற்கு தோல்வி: அன்புமணி குற்றச்சாட்டு

டாவோஸ் மாநாட்டில் தமிழகத்திற்கு தோல்வி: அன்புமணி குற்றச்சாட்டு

டாவோஸ் மாநாட்டில் தமிழகத்திற்கு தோல்வி: அன்புமணி குற்றச்சாட்டு


ADDED : ஜன 24, 2025 08:18 PM

Google News

ADDED : ஜன 24, 2025 08:18 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:'டாவோஸில் நடந்த உலகப் பொருளாதார மாநாட்டில், தமிழகத்தில் தொழில் துவங்க, எந்த ஒப்பந்தமும் கையெழுத்தாகவில்லை' என, பா.ம.க., தலைவர் அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார்.

அவரது அறிக்கை:

சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில், 2025ம் ஆண்டுக்கான உலகப் பொருளாதார மாநாடு மூன்று நாட்கள் நடந்தது. இதில், மஹாராஷ்டிரா 15.70 லட்சம் கோடி, தெலுங்கானா 1.79 லட்சம் கோடி ரூபாய், முதலீட்டு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன.

'வளர்ச்சியில் முன்னேறி பாயும் தமிழகம்' என்ற முழக்கத்துடன் பங்கேற்ற, தமிழகத்திற்கு எந்த முதலீடும் கிடைக்கவில்லை. இது, தமிழகத்திற்கு பெரும் தோல்வியாகும்.

தி.மு.க., ஆட்சிக்கு வந்த பிறகு,முதலீடுகளை ஈர்க்கும் திறன், தமிழகத்திற்கு குறைந்து வருகிறது.

மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட, தொழில் துவங்குவதற்கு ஏற்ற மாநிலங்கள் பட்டியலில், கடந்த முறை மூன்றாம் இடத்தில் இருந்த தமிழகம், இம்முறை பட்டியலில் இருந்தே நீக்கப்பட்டுள்ளது.

ஆனால், தி.மு.க., ஆட்சிக்கு வந்த பிறகு, முதலீடுகள் குவிவதை போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முயன்று வருகிறது.

கடந்த மூன்றரை ஆண்டுகளில், 10 லட்சம் கோடி ரூபாய்க்கும், கூடுதலான முதலீடுகள் வந்திருப்பதாக, தமிழக அரசு தொடர்ந்து கூறி வருகிறது. ஆனால், வெள்ளை அறிக்கை வெளியிட மறுக்கிறது.

முதல்வர் ஸ்டாலின் துபாய், ஸ்பெயின் சென்ற போது, உறுதி செய்யப்பட்ட தொழில் முதலீடுகளும், இதுவரை வரவில்லை.

எனவே, வீண் பேச்சுகளையும், வெட்டி விளம்பரங்களையும் செய்வதை விடுத்து, அதிக அளவில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகளை, தமிழக அரசு எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us