sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மனிதநேய ஜனநாயக கட்சி வழக்கு; தமிமுன் அன்சாரி பதிலளிக்க உத்தரவு

/

மனிதநேய ஜனநாயக கட்சி வழக்கு; தமிமுன் அன்சாரி பதிலளிக்க உத்தரவு

மனிதநேய ஜனநாயக கட்சி வழக்கு; தமிமுன் அன்சாரி பதிலளிக்க உத்தரவு

மனிதநேய ஜனநாயக கட்சி வழக்கு; தமிமுன் அன்சாரி பதிலளிக்க உத்தரவு


ADDED : மார் 03, 2024 04:22 AM

Google News

ADDED : மார் 03, 2024 04:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : கட்சி பெயர், கொடி பயன்படுத்த தடை கோரி, மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தொடர்ந்த வழக்கில், தமிமுன் அன்சாரி பதில் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் பஷீர் அகமது தாக்கல் செய்த மனு:

எங்கள் கட்சி, 2016 முதல் தேர்தலில் போட்டியிடுகிறது. தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. பொதுச் செயலராக பதவி வகித்த தமிமுன் அன்சாரி, அதிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

இதையடுத்து, தமிமுன் அன்சாரி தலைமையில், கட்சியின் செயற்குழு கூட்டப்பட்டதாகவும், பின், பொதுக்குழு கூட்டப்பட்டதாகவும், தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பினார்.

தற்போது, எங்கள் கட்சியில் உறுப்பினராக தமிமுன் அன்சாரி இல்லை. போலியான ஆவணங்களை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்து, தன்னை மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவராக கூறி வருகிறார்.

சட்ட விரோதமாக, எங்கள் கட்சி பெயர், கொடியை பயன்படுத்துகிறார். இதற்கு, தடை விதிக்க வேண்டும். கடந்த 2022 டிசம்பரில் கூட்டிய பொதுக்குழுவை சட்ட விரோதமானது என்று அறிவிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனு, நீதிபதி சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் எம்.வேல்முருகன் ஆஜரானார். மனுவுக்கு பதில் அளிக்க, தமிமுன் அன்சாரிக்கு உத்தரவிட்டு, விசாரணையை வரும் 18க்கு நீதிபதி தள்ளி வைத்தார்.






      Dinamalar
      Follow us