டாஸ்மாக்கில் ஸ்டாலின் படம் ஜாமினில வர முடியாதபடி வழக்கு *பா.ஜ.,வினர் கடும் அதிர்ச்சி
டாஸ்மாக்கில் ஸ்டாலின் படம் ஜாமினில வர முடியாதபடி வழக்கு *பா.ஜ.,வினர் கடும் அதிர்ச்சி
ADDED : மார் 20, 2025 08:20 PM
ராமநாதபுரம்:டாஸ்மாக் மதுக்கடையில் முதல்வர் போட்டோவை ஒட்டிய பா.ஜ., மாநில மகளிர் அணி துணைத் தலைவி உட்பட 3 பேர் மீது ஜாமினில் வெளியில் வரமுடியாத பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
டாஸ்மாக் ஊழல் விவகாரத்தில் முதல் குற்றவாளி முதல்வர் ஸ்டாலின் தான் என ராமநாதபுரம் காட்டூரணியில் உள்ள டாஸ்மாக் கடை சுவற்றில், முதல்வர் படத்தை பா.ஜ., மாநில மகளிர் அணி துணைத் தலைவர் கலாராணி, நிர்வாகிகளுடன் சென்று ஒட்டினார்.
இது தொடர்பாக டாஸ்மாக் கடை விற்பனையாளர் பாலமுருகன், அவரை கடையில் பணி செய்யவிடாமல் தடுத்தும், தாக்கி கீழே தள்ளிவிட்டு, கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் போலீசில் புகார் அளித்தார்.
இதையடுத்து, கலாராணி, குமார், சக்கரவர்த்தி ஆகியோர் மீது கேணிக்கரை போலீசார், ஜாமினில் வெளியே வர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்துள்ளனர்.
இதனால், டாஸ்மாக் கடையில் முதல்வர் போட்டோ ஒட்டிய பா.ஜ.,வினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.