sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

'டாஸ்மாக்' மதுக்கடைகளை முன்கூட்டியே மூட பரிசீலனை 

/

'டாஸ்மாக்' மதுக்கடைகளை முன்கூட்டியே மூட பரிசீலனை 

'டாஸ்மாக்' மதுக்கடைகளை முன்கூட்டியே மூட பரிசீலனை 

'டாஸ்மாக்' மதுக்கடைகளை முன்கூட்டியே மூட பரிசீலனை 


ADDED : அக் 28, 2025 04:18 AM

Google News

ADDED : அக் 28, 2025 04:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: மழைக்காலம் முடியும் வரை, டாஸ்மாக் மதுக் கடைகளை, இரவு 10:00 மணிக்கு பதில், ஒரு மணி நேரம் முன்னதாக மூட, தமிழக அரசு பரிசீலித்து வருகிறது.

தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம், சில்லரை கடைகள் வாயிலாக, மதுபான வகைகளை விற்கிறது. தினமும் மதியம், 12:00 மணி முதல் இரவு, 10:00 மணி வரை, கடைகள் செயல்படுகின்றன. மாலை, 6:00 மணி முதல் கடைகள் மூடப்படும் வரை, 'குடி'மகன்களின் கூட்டம் அலை மோதுகிறது.

தற்போது, வடகிழக்கு பருவமழை சீசன் துவங்கியுள்ள நிலையில், சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்கிறது. மது குடித்து சாலையில் விழும், 'குடி'மகன்கள் விபத்தில் சிக்க வாய்ப்புள்ளது. மேலும், இரவில் மதுக் கடைகளை மூடி விட்டு, வீடு செல்ல ஊழியர்கள் சிரமப்படுகின்றனர். எனவே, இரவு கடை மூடும் நேரத்தை குறைக்க, அரசு தரப்பில் ஆலோசனை நடந்து வருகிறது.

இது குறித்து, டாஸ்மாக் மேலாளர் ஒருவர் கூறியதாவது:

மதுக் கடைகளை சூழ்நிலைக்கு ஏற்றபடி மூட உத்தரவிட, கலெக்டர்களுக்கு அதிகாரம் உள்ளது. மழை சீசனில் மதுக் கடைகளை மூடக் கோரி, பல்வேறு தரப்பில் இருந்து மனுக்கள் வந்துள்ளன. எனவே, அடுத்த மாதம், 30ம் தேதி வரை மாநிலம் முழுதும், மதுக் கடைகள் நேரத்தை, இரவில் ஒரு மணி நேரம் குறைக்கலாமா அல்லது மழை பெய்யும் மாவட்டங்களில் மட்டும், அதை செயல்படுத்தலாமா என, அரசு பரிசீலித்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us