sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

'ஜில்' பீருக்கு அதிக பணம் வசூல்; வழக்கம் போல டாஸ்மாக் எச்சரிக்கை

/

'ஜில்' பீருக்கு அதிக பணம் வசூல்; வழக்கம் போல டாஸ்மாக் எச்சரிக்கை

'ஜில்' பீருக்கு அதிக பணம் வசூல்; வழக்கம் போல டாஸ்மாக் எச்சரிக்கை

'ஜில்' பீருக்கு அதிக பணம் வசூல்; வழக்கம் போல டாஸ்மாக் எச்சரிக்கை

6


ADDED : ஏப் 15, 2025 02:47 AM

Google News

ADDED : ஏப் 15, 2025 02:47 AM

6


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : தமிழக அரசின், 'டாஸ்மாக்' நிறுவனம் சில்லரை கடைகள் வாயிலாக பீர் மற்றும் மது வகைகளை விற்கிறது. தற்போது வெயில் சுட்டெரிக்கிறது. வெப்பத்தை தணிக்க, வாடிக்கையாளர்கள் மது வகைகளுக்கு பதிலாக, பீர் பாட்டில்களை அதிகம் வாங்குகின்றனர்.

இதனால், தினமும் சராசரியாக, 60,000 பெட்டிகளாக இருந்த பீர் விற்பனை தற்போது, ஒரு லட்சம் பெட்டிகளை தாண்டியுள்ளது. இதை சாதகமாக பயன்படுத்தி, கடை ஊழியர்கள், குளிர்ச்சியான பீர் பாட்டிலுக்கு, 20 - 30 ரூபாய் கூடுதலாக வசூலிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.

இதுகுறித்து, டாஸ்மாக் பொது மேலாளர் ஒருவர் கூறியதாவது:


மதுக் கடைகளில் குளிர்ச்சியான பீர் வழங்க, 'கூலர்'கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், கடைகளுக்கான மின் கட்டணத்தையும், நிர்வாகமே வழங்குகிறது.

எனவே, மதுக்கடைகளில் கூடுதல் விலைக்கு பீர் விற்பது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட கடை ஊழியர்கள் மீது, இடமாறுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என, மாவட்ட மேலாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us