sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 வரித்துறை மனித நேயத்துடன் இருக்க வேண்டும்: முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பேச்சு

/

 வரித்துறை மனித நேயத்துடன் இருக்க வேண்டும்: முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பேச்சு

 வரித்துறை மனித நேயத்துடன் இருக்க வேண்டும்: முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பேச்சு

 வரித்துறை மனித நேயத்துடன் இருக்க வேண்டும்: முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பேச்சு


ADDED : டிச 13, 2025 12:45 AM

Google News

ADDED : டிச 13, 2025 12:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ''வரித்துறை என்பது வெறும் தொழில்நுட்பத்துடன் இயங்காமல், மனித நேயத்துடன் செயல்பட வேண்டும்,'' என, நாட்டின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன் தெரிவித்தார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரி வருமான வரித்துறை இயக்குநர் ஜெனரல் பிரதாப் சிங் எழுதிய, 'தேசத்திற்கான சேவையில்' என்ற நுால் வெளியிட்டு விழா, நேற்று சென்னையில் நடந்தது.

நுாலின் முதல் பிரதியை, முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன் வெளியிட்டார். தமிழக வருமான வரித்துறை இயக்குநர் பிரதாப் சிங் பெற்றுக் கொண்டார். விழாவில், பிரதாப் சிங் பேசியதாவது:

இந்திய வருவாய் பணியில் உள்ள அதிகாரி களுக்கு, நான் எழுதிய புத்தகத்தை சமர்ப்பிக்கிறேன். இளம் அதிகாரிகள் மற்றும் சிவில் தேர்வு எழுதுவோருக்கு, இப்புத்தகம் பயனுள்ளதாக இருக்கும்.

முன்பை விட வரித்துறையில், நிறைய மாற்றங்கள் வந்துள்ளன. இளம் அதிகாரிகள் புதிதாக யோசிக்க வேண்டும்.

இவ்வாறு, அவர் பேசினார்.

முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன் பேசியதாவது:

இப்புத்தகம் சிவில் பணியில் உள்ள அதிகாரிகளின் வாழ்வை பிரதிபலிக்கிறது. இந்தியாவின் வரித்துறை அடுத்த கட்டத்திற்கு செல்ல, என்ன செய்ய வேண்டும் என்பது தெளிவாக உள்ளது.

வருவாய் துறையில் இருப்போர், தங்களின் நினைவுகளை பகிர்வது, அரிதான ஒன்று. நுாலாசிரியர் தன் சிறப்பான பணி காலத்தையும், சாதனைகளையும், நேர்மையாக எழுதியுள்ளார்.

இந்தியா உலக அரங்கில் உயர வேண்டும் என்ற ஆழமான தேச உணர்வு, இந்நுால் முழுதும் உள்ளது. ஒரு அதிகாரி நிர்வாகத்தில், என்ன செய்ய வேண்டும் என்பதை அறிய, இந்த புத்தகத்தை வாசிக்க வேண்டும்.

உலகின் திறமையானவர்களின் பட்டியலில், இந்திய சிவில் தேர்வு அதிகாரிகள் இருக்கின்றனர். அவர்கள் நாட்டின் முன்னேற்றத்திற்கு, ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றனர்.

வரித்துறை என்பது வெறும் தொழில்நுட்பத்துடன் இயங்காமல், மனித நேயத்துடன் செயல்பட வேண்டும்.

இவ்வாறு, அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us