sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 27, 2025 ,கார்த்திகை 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 'டெட்' தேர்ச்சி விலக்கு பிரதமர் மோடிக்கு ஆசிரியர்கள் சங்கம் கடிதம்

/

 'டெட்' தேர்ச்சி விலக்கு பிரதமர் மோடிக்கு ஆசிரியர்கள் சங்கம் கடிதம்

 'டெட்' தேர்ச்சி விலக்கு பிரதமர் மோடிக்கு ஆசிரியர்கள் சங்கம் கடிதம்

 'டெட்' தேர்ச்சி விலக்கு பிரதமர் மோடிக்கு ஆசிரியர்கள் சங்கம் கடிதம்


ADDED : நவ 27, 2025 02:07 AM

Google News

ADDED : நவ 27, 2025 02:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச் செயலர் பேட்ரிக் ரெய்மாண்ட் பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

கடந்த 2011ம் ஆண்டு, நவ., 15க்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கும், 'டெட்' எனும் ஆசிரியர் தகுதி தேர்ச்சி அவசியம் என, கடந்த செப்., 1ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்த நிர்ணயிக்கப்பட்ட தேதிக்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் அனைவருக்கும், தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் முழுமையான விலக்கு அளித்திருந்த போதிலும், இந்த தீர்ப்பு, பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு அபா யத்தை ஏற்படுத்தி உள்ளது .

இதனால், நாடு முழுதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், கடுமையான ஆசிரியர் பற்றாக்குறையை உருவாக்கும். எனவே, 'டெட்' தேர்ச்சி தொடர்பான, உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக, மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும்.

கடந்த 2011ம் ஆண்டு நவம்பர் மாதத்துக்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு, 'டெட்' தேர்ச்சி கட்டாயத்தில் இருந்து, நிரந்தரமாக விலக்கு பெற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us