உள்ளடக்கத்திற்கு செல்ல
பள்ளிகளுக்கு நாளை விடுமுறை ஆசிரியர்கள் வர உத்தரவு
பள்ளிகளுக்கு நாளை விடுமுறை ஆசிரியர்கள் வர உத்தரவு
ADDED : ஏப் 14, 2026 04:34 AM
அ நிறம் | அளவு
- நமது சிறப்பு நிருபர் -: தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 10, 11, 12ம் வகுப்புகளுக்கு தேர்வுகள் முடிவடைந்த நிலையில், ஒன்று முதல், 9ம் வகுப்பு வரையிலான மாணவ - மாணவியருக்கு தேர்வுகள் நடந்து வருகின்றன. ஏப்., 16ல், அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வுகள் நிறைவு பெறுகின்றன.
நாளை தேர்வு இல்லாத நிலையில், மாணவ - மாணவியருக்கு பள்ளி விடுமுறை என, அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு, நாளை இரண்டாம் கட்ட பயிற்சி நடைபெற உள்ளது.
இதனால், ஒட்டுமொத்தமாக பள்ளிக்கு விடுமுறை என, ஆசிரியர்கள் நம்பியிருந்தனர்.
ஆனால், தேர்தல் பயிற்சிக்கு செல்லாத ஆசிரியர்கள், நாளை காலை முதல், மாலை வரை பள்ளியில் இருக்க வேண்டும் என, பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
