sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 கொலை முயற்சி வழக்கில் வாலிபருக்கு 10 ஆண்டு சிறை

/

 கொலை முயற்சி வழக்கில் வாலிபருக்கு 10 ஆண்டு சிறை

 கொலை முயற்சி வழக்கில் வாலிபருக்கு 10 ஆண்டு சிறை

 கொலை முயற்சி வழக்கில் வாலிபருக்கு 10 ஆண்டு சிறை

1


ADDED : ஜன 30, 2026 07:13 AM

Google News

ADDED : ஜன 30, 2026 07:13 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: நெல்லிக்குப்பம் அருகே லாரி டிரைவரை கொலை செய்ய முயன்ற வழக்கில், வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, கடலுார் கோர்ட் தீர்ப்பளித்தது.

கடலுார் மாவட்டம், நெல்லிக்குப்பம் அடுத்த எழுமேடு அகரம் கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து மகன் வடிவேலன், 35; லாரி டிரைவர்.

இவருக்கும், அதே ஊரை சேர்ந்த சசி குமார், 24; என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது.

இந்நிலையில், கடந்த 2022ம் ஆண்டில் சசிக்குமார் தனது நண்பரான கீழ்குமாரமங்கலத்தை சேர்ந்த சிவனேஸ்வரனுடன் சேர்ந்து வடிவேலை தாக்கி, கத்தியால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்தார்.

புகாரின்பேரில் நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப்பதிந்து சசிகுமார், சிவனேஸ்வரனை கைது செய்தனர். இந்த வழக்கு கடலுார் இரண்டாவது கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் நடந்தது.

விசாரணை முடிந்த நிலையில் சசிகுமாருக்கு 10ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி பத்மாவதி தீர்ப்பளித்தார். சிவனேஸ்வரன் விடுவிக்கப்பட்டார்.

வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் அருணாச்சலம் ஆஜரானார்.






      Dinamalar
      Follow us