ADDED : பிப் 13, 2025 01:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:'தமிழகத்தில் ஓரிரு இடங்களில், இன்றும், நாளையும், 3 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்ப நிலை அதிகரிக்க வாய்ப்புள்ளது' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
அதன் அறிக்கை:
தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் வறண்ட வானிலையே காணப்படும். ஒரு சில இடங்களில் இன்றும், நாளையும் பகல் நேரத்தில் இயல்பை விட, 3 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பம் அதிகரிக்கக்கூடும்.
அதே நேரம், பிப்., 18 வரை பெரும்பாலான பகுதிகளில், வறண்ட வானிலை காணப்படும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேக மூட்டமாக காணப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.