கோவில் பூசாரி தற்கொலை வழக்கு; ஓ.பி.எஸ்., தம்பி ராஜா விடுதலை
கோவில் பூசாரி தற்கொலை வழக்கு; ஓ.பி.எஸ்., தம்பி ராஜா விடுதலை
ADDED : நவ 13, 2024 11:48 AM

திண்டுக்கல்: கோவில் பூசாரி தற்கொலை வழக்கில், ஓ.பி.எஸ்., தம்பி ராஜா உள்ளிட்ட ஆறு பேரை விடுதலை செய்து திண்டுக்கல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள டி.கள்ளிப்பட்டியை சேர்ந்த சுப்புராஜ் மகன் நாகமுத்து (வயது 22). இவர், கைலாசபட்டியில் உள்ள கைலாசநாதர் கோயிலில் பூசாரியாக இருந்தார்.
கோயிலில் கடை ஒதுக்குவது தொடர்பாக தலித் சமூகத்தைச் சேர்ந்த நாகமுத்துவுக்கும் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் தம்பியும் பெரியகுளம் நகர்மன்றத் தலைவரான ஓ. ராஜாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதில் நாகமுத்து தாக்கப்பட்டார்.
கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் 7ம் தேதி நாகமுத்து தற்கொலை செய்து கொண்டார். இவரை தற்கொலைக்கு தூண்டியதாக முன்னாள் முதல்வர் ஓ. ராஜா உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் திண்டுக்கல் நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணை நடந்தது. விசாரணையில் நீதிபதி முரளிதரன் ஓ.ராஜா உள்ளிட்ட வழக்கில் தொடர்புடைய ஆறு பேருக்கும் விடுதலை கொடுத்து தீர்ப்பளித்தார்.

