sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தை அமாவாசை; முன்னோருக்கு தர்ப்பணம் செய்து பக்தர்கள் வழிபாடு: புகைப்பட ஆல்பம் இதோ!

/

தை அமாவாசை; முன்னோருக்கு தர்ப்பணம் செய்து பக்தர்கள் வழிபாடு: புகைப்பட ஆல்பம் இதோ!

தை அமாவாசை; முன்னோருக்கு தர்ப்பணம் செய்து பக்தர்கள் வழிபாடு: புகைப்பட ஆல்பம் இதோ!

தை அமாவாசை; முன்னோருக்கு தர்ப்பணம் செய்து பக்தர்கள் வழிபாடு: புகைப்பட ஆல்பம் இதோ!

5


UPDATED : ஜன 29, 2025 12:41 PM

ADDED : ஜன 29, 2025 09:19 AM

Google News

UPDATED : ஜன 29, 2025 12:41 PM ADDED : ஜன 29, 2025 09:19 AM

5


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தை அமாவாசையை முன்னிட்டு, ராமநாதபுரம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர்.

தை அமாவாசையை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வந்தனர். அக்னி தீர்த்த கடலில் நீராடி விட்டு கோவில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களில் நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.

தமிழகம் முழுவதும், தை அமாவாசையை முன்னிட்டு ஏராமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.

Image 1374881

* மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் காவேரி சங்கமத் துறையில் ஏராளமானோர் புனித நீராடினர். முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து அரிசி, காய்கறிகள், தானியங்களை தானமாக கொடுத்து வழிபாடு நடத்தினர்.

* திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் திரண்ட பக்தர்கள் முக்குளத்தில் நீராடி, தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு நடத்தினர்.

* திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர்.

Image 1374884

* நாமக்கல் மாவட்டம், மோகனூர் காவிரி ஆற்றில் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து மக்கள் வழிபாடு நடத்தினர்.

Image 1374883

* கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் தங்களது முன்னோருக்கு தர்ப்பணம் செய்து பக்தர்கள் கடலில் நீராடினர்.

Image 1374885

* சிவகங்கை தெப்பக்குளத்தில் முன்னோர்களுக்கு மரியாதை செலுத்தினர்.

Image 1374892


தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு காவிரி ஆற்றின் புஷ்யமண்டப படித்துறையில் ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து, நீராடி வழிப்பட்டனர்.

Image 1374891



சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள குறிச்சி காசி விஸ்வநாதர் கோவிலில் ஏராளமானோர் தங்களது முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

Image 1374898

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் படித்துறையில் தர்ப்பணம் கொடுத்தும், விளக்கேற்றியும் முன்னோர்களுக்கு மக்கள் வழிபாடு செய்தனர்.






      Dinamalar
      Follow us