ADDED : ஆக 20, 2025 02:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தஞ்சாவூர்:தஞ்சாவூர் மாவட்டம், திருப்பனந்தாளில் காசிமடம் என்னும் பெயரில் சைவம், தமிழ், கலை, இலக்கிய சமூக, சமுதாய பணிகளை ஆற்றிவரும், அறம் வளர்க்கும் அருள் நிலையம் உள்ளது. இம்மடத்தின் 21வது மடாதிபதியாக காசிவாசி எஜமான் சுவாமிகள் எனும் முத்துக்குமார சுவாமி தம்பிரான் சுவாமிகள், 95, இருந்தார்.
இவர், 1958 முதல் துறவேற்று, சிறிது காலம் ஸ்ரீகாசிமடத்தின் இளவரசாக பணிபுரிந்து, 1972ல் காசிமடத்தின் அதிபரானார். 50 ஆண்டுகளுக்கு மேலாக, திருமுறைகளை பாராயணம் செய்து வந்தார்.
ஒரு மாதமாக வயது மூப்பு காரணமாக உடல் நலம் குன்றி சிகிச்சை பெற்ற நிலையில், திருப்பனந்தாள் மடத்தில் நேற்று இரவு, 8:00 மணிக்கு மகா சமாதி அடைந்தார்.