sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சூழ்நிலையை பொறுத்துத்தான் கூட்டணி அமையும்

/

சூழ்நிலையை பொறுத்துத்தான் கூட்டணி அமையும்

சூழ்நிலையை பொறுத்துத்தான் கூட்டணி அமையும்

சூழ்நிலையை பொறுத்துத்தான் கூட்டணி அமையும்


ADDED : மார் 15, 2025 07:40 PM

Google News

ADDED : மார் 15, 2025 07:40 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பா.ஜ.,வுடன் அ.தி.மு.க.,வுக்கு ஒட்டோ; உறவோ கிடையாது என எங்கள் கட்சி பொதுச்செயலர் பழனிசாமி சொன்னது நிஜம் தான். இன்றைக்கும் இந்த கருத்தில் இருந்து மாறி விட்டதாக சொல்ல முடியாது. காரணம், மும்மொழிக் கொள்கையை வலியுறுத்தி பா.ஜ., நடத்தும் கையெழுத்து இயக்கத்தின் படிவத்தில் கும்மிடிப்பூண்டி முன்னாள் அ.தி.மு.க., _ எம்.எல்.ஏ., விஜயகுமார் கையெழுத்திட்டார் என்றதும், உடனடியாக கட்சியை விட்டு நீக்கி நடவடிக்கை எடுத்தவர் பழனிசாமி.

ஆனால், அரசியலில் சூழ்நிலைக்கேற்பத்தான் கூட்டணி குறித்தெல்லாம் முடிவெடுக்க முடியும். அதனால் ஆறு மாதம் கழித்து கூட்டணி குறித்து முடிவெடுப்போம் என பா.ஜ.,வுடனான கூட்டணி குறித்து சொல்லி இருக்கிறார்.

காங்.,குடன் கூட்டணி என்பது தற்கொலைக்கு சமம் என்று கூறிய கருணாநிதி, பின், காங்.,கோடு கூட்டணி சேர்ந்த வரலாறெல்லாம் உண்டு. ஆக, சூழ்நிலைக்கேற்ப கூட்டணி குறித்து முடிவெடுப்பது இயற்கைதான்.

செல்லூர் ராஜு, முன்னாள் அமைச்சர்






      Dinamalar
      Follow us