sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

வரியில்லா ஒப்பந்தத்தின் பலன் ஆடைகள் ஏற்றுமதி அதிகரிப்பு

/

வரியில்லா ஒப்பந்தத்தின் பலன் ஆடைகள் ஏற்றுமதி அதிகரிப்பு

வரியில்லா ஒப்பந்தத்தின் பலன் ஆடைகள் ஏற்றுமதி அதிகரிப்பு

வரியில்லா ஒப்பந்தத்தின் பலன் ஆடைகள் ஏற்றுமதி அதிகரிப்பு


ADDED : அக் 26, 2024 11:17 PM

Google News

ADDED : அக் 26, 2024 11:17 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் செய்துள்ள நாடுகளுடனான, இந்தியாவின் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் அதிகரித்துள்ளதாக, ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலான ஏ.இ.பி.சி., தெரிவித்துள்ளது.

இந்தியாவுடன், வங்கதேசம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உட்பட, ஒன்பது நாடுகள் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் செய்து உள்ளன.

போர் சூழல் காரணமாக, உலகளாவிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு, வளர்ந்த நாடுகளும் சிக்கன நடவடிக்கையில் இறங்கின. இதனால், கடந்தாண்டு ஏற்றுமதி வர்த்தகம் குறைந்தது.

தற்போது நிலைமை சீராகி வருவதால், வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் செய்துள்ள நாடுகளுடனான ஏற்றுமதி வர்த்தகம் மீண்டும் அதிகரித்துள்ளதாக, ஏ.இ.பி.சி., தரவுகள் தெரிவிக்கின்றன.

நடப்பு நிதியாண்டின், ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான ஆயத்த ஆடை ஏற்றுமதி, 6,315 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு 3,790 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி நடைபெற்றுள்ளது.

ஏ.இ.பி.சி., அதிகாரிகள் கூறுகையில், 'வரியில்லா ஒப்பந்தம் ஏற்படுத்தும் போது, வரி செலவினம் குறைவதால், வர்த்தகம் அதிகரிக்கிறது.

'ஒப்பந்தம் செய்துள்ள நாடுகளில், எட்டு நாடுகளுக்கான ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம், தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நடப்பு நிதியாண்டின் முதல் ஐந்து மாத கால ஏற்றுமதி, 7.10 சதவீதம் அதிகரித்துள்ளது' என்றனர்.






      Dinamalar
      Follow us