ADDED : நவ 30, 2024 02:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை:ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் பிரபு.உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:
முதுகுளத்துார், கமுதி, கடலாடி தாலுகாக்களில் பழங்குடி மக்கள் வறுமையில் உள்ளனர். இலவச வீடு, கல்வி, உதவித் தொகை உள்ளிட்ட அரசின் நல உதவிகள் கிடைக்கவில்லை. அவர்களை மேம்படுத்த நல உதவிகள், வேலைவாய்ப்பு, சலுகைகளை பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டின் கீழ் வழங்கக்கோரி மத்திய, மாநில அரசுகளுக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு தேசிய சீர்மரபினர் கமிஷன் தலைவர், தமிழக தலைமைச் செயலர் ஜன., 6ல் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

