ADDED : மார் 09, 2026 06:50 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மத்திய அரசு, நாடு முழுதும், சமையல் காஸ் சிலிண்டருக்கு, 60 ரூபாய் உயர்த்தி உள்ளது. ஏற்கனவே, மத்திய அரசின் ஜி.எஸ்.டி., உள்ளிட்ட வரிக் கொடுமையாலும் விலைவாசி உயர்வாலும், மக்கள் துன்பப்படுகின்றனர்.
தற்போது, சாதாரண ஏழை, எளிய நடுத்தர மக்களுக்கு, காஸ் சிலிண்டர் விலையை உயர்த்தி, மக்கள் தலையின் மீது, மத்திய அரசு இடியை இறக்கியுள்ளது. இந்த விலை உயர்வினால், சங்கிலித் தொடர் போல், உணவுப் பொருட்களின் விலைகள் பல மடங்கு உயரும் ஆபத்து உள்ளது.
- சண்முகம், மாநில செயலர், மார்க்சிஸ்ட் கம்யூ.,

