sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

முதல்வர் பொய் சொல்கிறார்: அண்ணாமலை ஆவேசம்

/

முதல்வர் பொய் சொல்கிறார்: அண்ணாமலை ஆவேசம்

முதல்வர் பொய் சொல்கிறார்: அண்ணாமலை ஆவேசம்

முதல்வர் பொய் சொல்கிறார்: அண்ணாமலை ஆவேசம்

1


ADDED : பிப் 10, 2025 06:26 AM

Google News

ADDED : பிப் 10, 2025 06:26 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : 'தமிழகத்தில் செயல்படுத்தப்படாத திட்டத்திற்கு மத்திய அரசு எவ்வாறு நிதி வழங்கும்' என, முதல்வர் ஸ்டாலினுக்கு, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

அவரது அறிக்கை:


தமிழகம் தன் பெருமையை தொலைத்து, கணிதத்திலும், தாய்மொழி அறிவிலும், கடைசி இடத்தில் உள்ளது. கல்வியை அரசியலாக்கி, கல்வியின் தரத்தை குறைத்து, தமிழக குழந்தைகளுக்கு, சமமான வாய்ப்புகளையும், உலகத்தரம் வாய்ந்த கல்வியையும் கிடைக்காமல் செய்ததற்காக, முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது கட்சியினர் வெட்கப்பட வேண்டும்.

நடப்பு கல்வியாண்டின் துவக்கத்தில் இருந்து, 'சமக்ர சிக் ஷா'வின் அனைத்து அம்சங்களையும் செயல்படுத்துவதாக, தமிழக அரசு கடந்த ஆண்டு மார்ச் மாதம் உறுதி அளித்தது.

இந்த உறுதிமொழியை, ஸ்டாலின் அரசு நிறைவேற்றவில்லை. செயல்படுத்தப்படாத ஒரு திட்டத்திற்கு மத்திய அரசு எவ்வாறு நிதி வழங்கும் என எதிர்பார்க்கிறீர்கள்.

சமர சிக் ஷா திட்டத்தின் கீழ் பல மாநிலங்களுக்கு, இன்னும் 2024 - 25ம் ஆண்டுக்கான நிதி விடுக்கப்படவில்லை. தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி, மற்ற மாநிலங்களுக்கு திருப்பி விடப்படுகிறது என்ற பொய்யை பரப்ப முதல்வருக்கு வெட்கமாக இல்லையா? இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us