sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

'கங்குவா' படத்துக்கு தடை கோரிய வழக்கில் இன்று முடிவு

/

'கங்குவா' படத்துக்கு தடை கோரிய வழக்கில் இன்று முடிவு

'கங்குவா' படத்துக்கு தடை கோரிய வழக்கில் இன்று முடிவு

'கங்குவா' படத்துக்கு தடை கோரிய வழக்கில் இன்று முடிவு


ADDED : நவ 08, 2024 12:19 AM

Google News

ADDED : நவ 08, 2024 12:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:நடிகர் சூர்யாவின், கங்குவா படத்துக்கு தடை கோரிய வழக்கில், 'ரிலையன்ஸ்' நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய பாக்கித் தொகையை இன்று வழங்குவதாக, 'ஸ்டூடியோ கிரீன்' நிறுவனம் தரப்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தன் 'ஸ்டுடியோ கிரீன்' தயாரிப்பு நிறுவனம் சார்பில், டெடி- 2, எக்ஸ் மீட்ஸ் ஓய், தங்கலான் போன்ற படங்கள் தயாரிக்க, 'ரிலையன்ஸ்' நிறுவனத்திடம், 99 கோடி 22 லட்சத்து 49 ஆயிரம் ரூபாய் கடன் பெற்றிருந்தார்;

அதில், 45 கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது; மீதமுள்ள 55 கோடி ரூபாயை வழங்காமல், ஒப்பந்த விதிகளை மீறியதாக கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில், 'ரிலையன்ஸ்' நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

மனுவில், 'நிலுவைத் தொகையை திருப்பி தராமல், கங்குவா படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும். தங்கலான் படத்தை ஓ.டி.டி.,யில் வெளியிட தடை விதிக்க வேண்டும்' என கூறப்பட்டது.

வழக்கு நீதிபதி அப்துல் குத்துாஸ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, ரிலையன்ஸ் நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன், ''ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் வழங்க வேண்டிய தொகையில், 18 கோடி ரூபாயை மேங்கோ மாஸ் மீடியா நிறுவனம் செலுத்தியதால், தங்கலான் படத்தை ஓ.டி.டி., தளத்தில் வெளியிட ஆட்சேபமில்லை,'' என்றார்.

ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன், ''மீதித்தொகை இன்று வழங்கப்படும்,'' என உறுதியளித்தார். இதை பதிவு செய்த நீதிபதி, பாக்கித் தொகையை செலுத்தியது குறித்து தெரிவிக்கும் வகையில், விசாரணையை இன்றைக்கு தள்ளிவைத்தார்.






      Dinamalar
      Follow us