sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சதுரகிரியில் பக்தர்கள் அனுமதி; மழையை பொறுத்தே முடிவு

/

சதுரகிரியில் பக்தர்கள் அனுமதி; மழையை பொறுத்தே முடிவு

சதுரகிரியில் பக்தர்கள் அனுமதி; மழையை பொறுத்தே முடிவு

சதுரகிரியில் பக்தர்கள் அனுமதி; மழையை பொறுத்தே முடிவு


ADDED : ஜன 21, 2024 07:14 AM

Google News

ADDED : ஜன 21, 2024 07:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வத்திராயிருப்பு : சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் தை மாத பிரதோஷம்,: பவுர்ணமி வழிபாட்டிற்கு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிப்பது, மழையை பொறுத்து முடிவு செய்யப்படும் என வனத்துறை தெரிவித்துள்ளது.

இக் கோயிலில் ஜன. 23ல் தை மாத பிரதோஷம், ஜன 25ல் பவுர்ணமி வழிபாடு பூஜைகள் நடக்க உள்ளன. மழையின் காரணமாக 2 மாதங்களாக பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய முடியவில்லை. இப்போதும் பக்தர்களை அனுமதிப்பது குறித்து இதுவரை வனத்துறை அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

ஓடைகளில் நீர்வரத்து குறைந்துள்ள நிலையில் நேற்று முன்தினம் வரை வெயிலின் தாக்கம் காணப்பட்டது. ஆனால் நேற்று காலை முதல் சாரல் பெய்தது. இதனால் பக்தர்களை அனுமதிப்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து சாப்டூர் வனச்சரகர் செல்வமணி கூறியதாவது: இதுகுறித்து நாளை (ஜன. 22) புலிகள் காப்பகத் துணை இயக்குனரிடம் ஆலோசித்து அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்படும். மழையைப் பொறுத்தே பக்தர்கள் அனுமதிப்பது குறித்து முதல் நாள் தான் முடிவு செய்யப்படும் என்றார்.






      Dinamalar
      Follow us