பிடுங்கி எறியப்பட வேண்டிய நஞ்சுக்கொடி தி.மு.க., அரசு
பிடுங்கி எறியப்பட வேண்டிய நஞ்சுக்கொடி தி.மு.க., அரசு
ADDED : ஜன 09, 2026 02:07 AM

சென்னை: 'தங்களுக்கு பிடிக்காத தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டது என்ற ஒரே காரணத்திற்காக, ஜனநாயகத்தின் மூன்றாம் துாணான நீதித் துறையின் அஸ்திவாரத்தையே அசைத்து பார்க்க துணிந்து விட்ட தி.மு.க., அரசு, சமூகத்தில் இருந்தே பிடுங்கி எறியப்பட வேண்டிய நஞ்சுக்கொடி' என, தமிழக பா.ஜ., தெரிவித்துள்ளது.
அரசு துணை அக்கட்சி அறிக்கை:
நீதித் துறையை இத்தனை ஆணவத்தோடு அணுகும் ஒரு அரசை, நாடு இதுவரை கண்டதில்லை.
திருப்பரங்குன்றம் தீபத்துாணில் கார்த்திகை தீபமேற்றலாம் என்பதை, நியாயமான முறையில் ஆதாரத்துடன் விளக்கி கூறி விட்டார் என்பதற்காக, பொறுப்பில் உள்ள ஒரு உயர் நீதிமன்ற நீதிபதியை மிகவும் கீழ்த்தரமாக விமர்சிக்கும் ஒரு புத்தகத்தை, சென்னை புத்தக கண்காட்சியில் வெளியிட போவதாக, கீழைக்காற்று பதிப்பகம் பகிரங்கமாக விளம்பரப்படுத்துகிறது. இது ஆளும் அரசின் துணையின்றி நடக்குமா?
கரூர் வழக்கின் உயர் நீதிமன்ற தீர்ப்பை விமர்சனம் செய்தவர்களை, 'நீதிமன்ற அவமதிப்பு' எனக் கூறி, இரவோடு, இரவாக கைது செய்த போலீசார், இப்படி ஒரு நீதிபதியை மத ரீதியாக கொச்சைப் படுத்துபவர்களை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தது எதனால்?
அஸ்திவாரம் தங்களுக்கு பிடிக்காத தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டது என்ற ஒரே காரணத்திற்காக, ஜனநாயகத்தி ன் மூன்றாம் துாணான நீதித் துறையின் அஸ்திவாரத்தையே அசைத்து பார்க்க துணிந்து விட்ட தி.மு.க., அரசு, சமூகத்தில் இருந்தே பிடுங்கி எறியப்பட வேண்டிய நஞ்சுக்கொடி.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

