sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பூங்கா சுற்றுச்சுவரை இடித்து அட்டகாசம் செய்த யானைகள்

/

பூங்கா சுற்றுச்சுவரை இடித்து அட்டகாசம் செய்த யானைகள்

பூங்கா சுற்றுச்சுவரை இடித்து அட்டகாசம் செய்த யானைகள்

பூங்கா சுற்றுச்சுவரை இடித்து அட்டகாசம் செய்த யானைகள்


ADDED : ஜன 22, 2024 06:38 AM

Google News

ADDED : ஜன 22, 2024 06:38 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புன்செய்புளியம்பட்டி : ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையை ஒட்டி, 15 ஏக்கர் பரப்பளவில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பூங்கா, வனப்பகுதியை ஒட்டி உள்ளதால், யானைகள் அவ்வழியாக கடந்து செல்வது வழக்கம்.

நேற்று முன்தினம் இரவு இரண்டு யானைகள், வனப்பகுதியில் இருந்து வெளியேறி பண்ணாரி சாலை வந்து, பவானிசாகர் பூங்காவை முற்றுகையிட்டன.

சிறிது நேரத்தில் பூங்காவின் சுற்றுச்சுவர், கேட்டை இடித்து சேதப்படுத்தின. பூங்கா ஊழியர்கள், வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

அவர்கள் வருவதற்குள், மீண்டும், புங்கார் கிராம பகுதிக்கு சென்ற காட்டு யானைகளை, பொதுமக்கள் விரட்டியடித்தனர்.

அப்பகுதி மக்கள் கூறுகையில், 'வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானைகளால், பயிர்கள் சேதமாகின்றன.

'வனத்துறை சார்பில் வெட்டப்பட்ட யானை தடுப்பு அகழிகள் ஆழமாக இல்லை. அட்டகாசம் செய்து வரும் யானைகளை, அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும்' என்றனர்.






      Dinamalar
      Follow us