'விடுபட்ட தகுதியுள்ள மகளிருக்கு உரிமைத்தொகை நிச்சயம்'
'விடுபட்ட தகுதியுள்ள மகளிருக்கு உரிமைத்தொகை நிச்சயம்'
ADDED : டிச 15, 2025 06:09 AM

தர்மபுரி மேற்கு மாவட்ட தி.மு.க., செயலரும், முன்னாள் அமைச்சருமான பழனியப்பன் இல்ல திருமண விழாவில், முதல்வர் ஸ்டாலின் நேற்று பங்கேற்றார்.
அதில், அவர் பேசியதாவது: தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை, 1.13 கோடி பேருக்கு வழங்கப்பட்டது. தற்போது கூடுதலாக, 17 லட்சம் சகோதரியருக்கு வழங்கியுள்ளோம். இன்னும் கூட தகுதி உள்ளவர்கள் விடுபட்டிருந்தால், அவர்கள் உடனடியாக கோரிக்கை வைக்கும்பட்சத்தில் அவர்களுக்கும் நிச்சயமாக வழங்கப்படும்.
ஜி.டி.பி., வளர்ச்சியில், 'நம்பர் ஒன்' மாநிலமாக தமிழகம் உருவாகியிருக்கிறது. இது, நாங்கள் வெளியிட்ட அறிக்கை அல்ல; ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கை. எவ்வளவோ தடங்கல், சோதனையெல்லாம் தாண்டி இன்றைக்கு சாதனை படைத்திருக்கிறது இந்த ஆட்சி. எஸ்.ஐ.ஆர்., பணிகளை, தி.மு.க.,வினர் வெற்றிகரமாக நடத்தியதை பார்த்து, எல்லாரும் பெருமைப்படுகின்றனர். நம் ஓட்டுரிமையை காப்பாற்ற, விழிப்போடு வேலைகளை பார்க்கிறோம்.
அதேநேரத்தில் பாதி வேலைதான் முடிந்துள்ளது. நம் சாதனைகளை வீடுவீடாகச் சென்று கூறி, ஓட்டுகளாக மாற்ற வேண்டும்.இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

