sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அருப்புக்கோட்டை கோவிலில் திதி செய்யவிடாமல் தடுத்த செயல் அலுவலர்

/

அருப்புக்கோட்டை கோவிலில் திதி செய்யவிடாமல் தடுத்த செயல் அலுவலர்

அருப்புக்கோட்டை கோவிலில் திதி செய்யவிடாமல் தடுத்த செயல் அலுவலர்

அருப்புக்கோட்டை கோவிலில் திதி செய்யவிடாமல் தடுத்த செயல் அலுவலர்

7


ADDED : ஜன 30, 2025 05:47 AM

Google News

ADDED : ஜன 30, 2025 05:47 AM

7


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை பட்டாபிராமர் கோயிலில் நேற்று தை அமாவாசையை முன்னிட்டு தர்ப்பணம் செய்ய வந்த பக்தர்களை கோயில் செயல் அலுவலர் ராமதிலகம் தடுத்ததால் பல மணி நேரம் காத்திருந்து வேதனையுடன் தர்ப்பணம் செய்துவிட்டு சென்றனர்.

அருப்புக்கோட்டை திருச்சுழி ரோட்டில் ஹிந்து சமய அறநிலைய துறைக்கு பாத்தியப்பட்ட பட்டாபிராமர் கோயில் உள்ளது. நுாற்றாண்டு பழமை வாய்ந்த இந்த கோயிலில் 50 ஆண்டுகளுக்குமேலாக பக்தர்கள் கோயிலுக்கு வந்து அமாவாசை நாட்களில் தர்ப்பணம் செய்வது வழக்கம். முக்கியமாக மஹாளய அமாவாசை, தை அமாவாசை, ஆடி அமாவாசை நாட்களில்அதிகமானோர் தர்ப்பணம் செய்து வந்தனர். திருச்சுழி, ராமேஸ்வரம் செல்ல முடியாத வயதானவர்கள், ஏழை மக்கள் இங்கு வந்து தர்ப்பணம் செய்வர்.

நேற்று தை அமாவாசையை முன்னிட்டு மக்கள் முன்னோருக்கு தர்ப்பணம் செய்ய கோயிலுக்கு அதிகாலையிலேயே வந்தனர். கோயிலின் செயல் அலுவலர் ராமதிலகம் கோயில் அர்ச்சகரிடம் யாரும் தர்ப்பணம் செய்யக்கூடாது என கூறிவிட்டார். தர்ப்பணம் செய்ய வந்தவர்களும் செயல் அலுவலரிடம் அலைபேசியில் பலமுறை தொடர்பு கொண்டும் அவர் மறுத்துவிட்டார். இதனால் பக்தர்கள் பல மணி நேரம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய முடியாத நிலையில் வேதனையில் இருந்தனர். பல மணி நேரம் கழித்து செயல் அலுவலர் சம்மதத்துடன் கோயிலில் பக்தர்கள் தர்ப்பணம் செய்தனர்.

இக்கோயிலில் ஓராண்டாக பணியாற்றி வரும் செயல் அலுவலர் ராமதிலகத்திடம் இதுகுறித்து கேட்டபோது, கோயிலில் தர்ப்பணம் செய்யும் வழக்கம் பல ஆண்டுகளாக இருப்பது எனக்கு தெரியாது. புதியதாக தர்ப்பணம் செய்ய வருகிறார்கள் என நினைத்து செய்யக்கூடாது என நான் கூறினேன். என்றார்.

கோயிலில் தர்ப்பணம் செய்ய வந்த பக்தர்கள் கூறியதாவது: நாங்கள் 40 ஆண்டுகளாக இக்கோயிலில் தர்ப்பணம் செய்து வருகிறோம். இப்போதுள்ள செயல் அலுவலர் ராமதிலகம் கோயிலில் தர்ப்பணம் செய்யக்கூடாது என தடுக்கிறார். காலையிலிருந்து கத்திருந்து மன உளைச்சலுக்கு ஆளானோம் என்றனர்.






      Dinamalar
      Follow us