sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சட்டசபை கூட்டத்தொடர் துவக்கம்; உரையை வாசிக்காமல் வெளியேறிய கவர்னர்!

/

சட்டசபை கூட்டத்தொடர் துவக்கம்; உரையை வாசிக்காமல் வெளியேறிய கவர்னர்!

சட்டசபை கூட்டத்தொடர் துவக்கம்; உரையை வாசிக்காமல் வெளியேறிய கவர்னர்!

சட்டசபை கூட்டத்தொடர் துவக்கம்; உரையை வாசிக்காமல் வெளியேறிய கவர்னர்!

41


UPDATED : ஜன 06, 2025 10:42 AM

ADDED : ஜன 06, 2025 09:34 AM

Google News

UPDATED : ஜன 06, 2025 10:42 AM ADDED : ஜன 06, 2025 09:34 AM

41


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ஆண்டின் முதல் தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று (ஜன.,06) காலை 9:30 மணிக்கு கூடியது. கூட்டத்தொடரில் பங்கேற்க வந்த கவர்னர் ரவி, அவை தொடங்கிய 3 நிமிடத்திலேயே, தமிழக அரசின் உரையை வாசிக்காமல் புறப்பட்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, அந்த உரையை சபாநாயகர் வாசித்து வருகிறார்.

புத்தாண்டில், தமிழக சட்டசபை கூட்டத்தொடர், இன்று (ஜன.,06) காலை 9:30 மணிக்கு, சட்டசபை கூட்ட அரங்கில் துவங்கியது. கூட்டத்தொடரில் பங்கேற்க வந்த கவர்னர் ரவி, அவை தொடங்கிய 3 நிமிடத்திலேயே, தமிழக அரசின் உரையை வாசிக்காமல் புறப்பட்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. தேசிய கீதம் பாட அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறி, கவர்னர் ரவி கூட்டத்தொடரை புறக்கணித்தார். ,இதைத் தொடர்ந்து, சபாநாயகர் அப்பாவு அந்த உரையை வாசித்து வருகிறார்.

முன்னதாக, சட்டசபைக்கு வந்த கவர்னர் ரவிக்கு போலீஸ் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அவர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். கவர்னர் ரவியை சபாநாயகர் அப்பாவு பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.

கடந்த 2023 சட்டசபை கூட்டத்தில், அரசு தயாரித்து அளித்திருந்த கவர்னர் உரையில் சில வாசகங்களை தவிர்த்தும், சில வாசகங்களை சேர்த்தும், கவர்னர் உரையாற்றினார். 'கவர்னர் தவிர்த்த வாசகங்களுடன், கவர்னர் உரை சட்டசபை குறிப்பில் இடம் பெறும். உரையில் இல்லாமல் கவர்னர் பேசியவை இடம் பெறாது' என, முதல்வர் தீர்மானம் கொண்டு வந்தார்.

இதனால் கோபம் அடைந்த கவர்னர், சட்டசபை கூட்டம் முடிவதற்கு முன்னதாகவே, சபையிலிருந்து வெளியேறினார். கடந்த ஆண்டு சட்டசபையில் உரை நிகழ்த்த வந்த கவர்னர், தன் உரையின் முதல் பக்கத்தில் உள்ளதை படித்து விட்டு, சில கருத்துக்களை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் வெளியேற்றம்!

இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத் தொடரில் பங்கேற்க வந்த அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள், 'யார் அந்த சார்?' என்று அச்சிடப்பட்ட சட்டையை அணிந்து வந்தனர். அவையில் அமளியில் ஈடுபட்ட அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள், சபாநாயகர் அப்பாவு உத்தரவுப்படி குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர். உரையை கவர்னர் புறக்கணித்ததைக் கண்டித்து காங்., எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு செய்தனர்.



பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் வெளிநடப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்த விவாகரத்தில், தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறி பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து, பா.ஜ., எம்.எல்.ஏ., நயினார் நாகேந்திரன் நிருபர்கள் சந்திப்பில் கூறுகையில், 'தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும்' என தெரிவித்தார்.








      Dinamalar
      Follow us