sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் நாளை சொர்க்கவாசல் திறப்பு

/

ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் நாளை சொர்க்கவாசல் திறப்பு

ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் நாளை சொர்க்கவாசல் திறப்பு

ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் நாளை சொர்க்கவாசல் திறப்பு


ADDED : ஜன 09, 2025 06:44 AM

Google News

ADDED : ஜன 09, 2025 06:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்துார்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நாளை (ஜன.10) காலை 7:05 மணிக்கு சொர்க்கவாசல் திறப்பு நடக்கிறது.

இதனை முன்னிட்டு நாளை அதிகாலை 3:30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு பெரிய பெருமாள், ஆண்டாள், ரெங்க மன்னார் வேத விண்ணப்பமாகி மூலஸ்தானத்தில் இருந்து புறப்படுதல் நடக்கிறது. பின்னர் சிறப்பு பூஜைகள் முடிந்து காலை 7:05 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு அதன் வழியே எழுந்தருளும் ஆண்டாள் , ரெங்கமன்னாரை ஆழ்வார்கள் எதிர் கொண்டு வரவேற்கின்றனர். பின்னர் மாடவீதி, கந்தாடை வீதி வழியாக ராப்பத்து மண்டபத்திற்கு ஆண்டாள், ரெங்கமன்னார், பெரிய பெருமாள் எழுந்தருள்கின்றனர்.

அங்கு மங்களாசாசனம், திருவாய்மொழி துவக்கம், அரையர் அருளிப்பாடு, பெரிய பெருமாள் பக்தி உலாவுதல், அரையர் வியாக்கியானம், சேவா காலம் மற்றும் கோஷ்டி நடக்கிறது. பின்னர் மாலை 4:00 மணிக்கு ஆண்டாள், ரெங்கமன்னார் அங்கிருந்து புறப்பட்டு ஆஸ்தானம் செல்கின்றனர்.

ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் வெங்கட் ராமராஜா, செயல் அலுவலர் சக்கரையம்மாள், கோயில் ஊழியர்கள் செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us