sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கரும்புக்கு சிறப்பு ஊக்கத்தொகை; ரூ.297 கோடி ஒதுக்கியது அரசு

/

கரும்புக்கு சிறப்பு ஊக்கத்தொகை; ரூ.297 கோடி ஒதுக்கியது அரசு

கரும்புக்கு சிறப்பு ஊக்கத்தொகை; ரூ.297 கோடி ஒதுக்கியது அரசு

கரும்புக்கு சிறப்பு ஊக்கத்தொகை; ரூ.297 கோடி ஒதுக்கியது அரசு


ADDED : ஜூலை 01, 2025 04:07 AM

Google News

ADDED : ஜூலை 01, 2025 04:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : 'சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பு வழங்கிய, 1.30 லட்சம் விவசாயிகளுக்கு, சிறப்பு ஊக்கத்தொகை வழங்க, அரசு 297 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது' என, சர்க்கரைத் துறை அமைச்சர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

கரும்பு சாகுபடி பரப்பை அதிகரிப்பதற்கும், சர்க்கரை ஆலைகளின் செயல்திறனை மேம்படுத்துவதற்கும், அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக, 2021ம் ஆண்டு முதல், கரும்பு விவசாயிகளுக்கு, சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, 'முன் எப்போதும் இல்லாத அளவிற்கு, 2025 - 26ம் ஆண்டு வேளாண் பட்ஜெட்டில், 2024 - 24ம் ஆண்டு அரவை பருவத்தில், கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு, டன்னுக்கு 349 சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும்' என அறிவிக்கப்பட்டது. இதற்காக, 297 கோடி ரூபாயை அரசு ஒதுக்கீடு செய்து, அரசாணை வெளியிட்டுஉள்ளது.

இதன் வாயிலாக, 12 கூட்டுறவு, 2 பொதுத்துறை, 16 தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு, கரும்பு வழங்கிய, 1.30 லட்சம் விவசாயிகள் பயன் பெறுவர். கரும்பு விவசாயிகளின் வங்கி கணக்கில், ஊக்கத்தொகை நேரடியாக செலுத்த, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us