sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தலைகுனிவை ஏற்படுத்திய கவர்னர்: அமைச்சர் கோவி.செழியன் பாய்ச்சல்

/

தலைகுனிவை ஏற்படுத்திய கவர்னர்: அமைச்சர் கோவி.செழியன் பாய்ச்சல்

தலைகுனிவை ஏற்படுத்திய கவர்னர்: அமைச்சர் கோவி.செழியன் பாய்ச்சல்

தலைகுனிவை ஏற்படுத்திய கவர்னர்: அமைச்சர் கோவி.செழியன் பாய்ச்சல்

2


ADDED : மே 16, 2025 06:20 AM

Google News

ADDED : மே 16, 2025 06:20 AM

2


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை':

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் அறிக்கை:

ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளான, பெரியார் பல்கலை துணைவேந்தர் ஜெகன்னாதனுக்கு பிரிவு உபசார விழாவை, கவர்னர் நடத்தி இருப்பது கண்டனத்துக்குரியது.

பல்கலை தோறும் மதவாத பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் கவர்னர், ஊழல் வழக்கில் உள்ளவரை, அதிலும், பினாமி கம்பெனி உருவாக்கி, ஊழல் புகாரில் சிக்கியவரை, எப்படி கவர்னர் மாளிகையில் வரவேற்றார்.

ஜெகன்னாதன், முறைகேடு புகாரில் கைது செய்யப்பட்டு, போலீஸ் விசாரணைக்கு ஏறி இறங்கிக் கொண்டிருப்பவர். துணைவேந்தராக இருக்கும்போதே, ஜாதி பெயரை சொல்லி, ஒருவரை திட்டியதால், வன்கொடுமை சட்டப்பிரிவின் கீழான வழக்கில் கைது செய்யப்பட்டவர்.

விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றால், கைது செய்ய நேரிடும் என, உயர் நீதிமன்றத்தாலேயே எச்சரிக்கப்பட்டவர்.

இவரது பதவிக்காலம் முடிந்த பிறகும், பணி நீட்டிப்பு வழங்கியதோடு, அவரது பிரிவு உபசார விழாவை, கவர்னர் மாளிகையிலே நடத்தியதன் வாயிலாக, 'வேந்தர்' என்ற பொறுப்பில் இருப்பதற்கான தகுதியை, கவர்னர் இழந்து விட்டார்.

தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி, உயர் கல்வியின் மாண்பை சீர்குலைத்துள்ள கவர்னர், பல்கலை வரலாற்றில், தமிழகத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்தி விட்டார்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us