sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மணமகன் மாயம்: நின்றது திருமணம்

/

மணமகன் மாயம்: நின்றது திருமணம்

மணமகன் மாயம்: நின்றது திருமணம்

மணமகன் மாயம்: நின்றது திருமணம்


ADDED : பிப் 05, 2025 02:34 AM

Google News

ADDED : பிப் 05, 2025 02:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பரமக்குடி:ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே திருமண நாளன்று மணமகன் வராத நிலையில் போலீசார் அவரை தேடுகின்றனர்.

பரமக்குடி அருகே மேலப்பெருங்கரை கிராமத்தைச் சேர்ந்தவர் 22 வயது பெண்.

இவருக்கும் பரமக்குடி பொன்னையாபுரத்தை சேர்ந்தவர் கட்டட பணி செய்யும் தொழிலாளிக்கும் இரண்டு மாதங்களுக்கு முன் இருவீட்டார் முன்னிலையில் திருமணம் பேசி நிச்சயிக்கப்பட்டது.

தொடர்ந்து பத்திரிக்கை அச்சடித்து அனைத்து ஏற்படும் நடந்த நிலையில் ஜன.29ல் திருமணம் செய்ய பிடிக்கவில்லை என தொழிலாளி கூறியதால் பரமக்குடி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் பேச்சுவார்த்தை நடந்தது.

அப்போது இரு வீட்டாருக்கும் இடையே சமரசம் ஏற்பட்டு திருமணம் செய்ய ஒப்புக்கொண்டனர். இதையடுத்து நேற்று முன்தினம் மேலப் பெருங்கரை அட்டாள சொக்கநாதர் கோயிலில் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உணவுகள் அனைத்தும் தயார் செய்து மணப்பெண் வீட்டார் மணமகளுடன் காத்திருந்தனர்.

நீண்ட நேரம் ஆகியும் மணமகன் உட்பட அவரது வீட்டார் யாரும் வராததால் திருமண ஆசை காட்டி அனைத்து ஏற்பாடுகளும் நடந்த நிலையில் தன்னை ஏமாற்றியதாக மீண்டும் போலீஸ் ஸ்டேஷனில் மணப்பெண் புகார் அளித்துள்ளார். பரமக்குடி மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாரதா, மணமகனை தேடுகிறார்.






      Dinamalar
      Follow us