sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தி.மு.க., அரசு மீது அவதுாறு பரப்பும் எண்ணம் ஈடேறாது: செந்தில் பாலாஜி

/

தி.மு.க., அரசு மீது அவதுாறு பரப்பும் எண்ணம் ஈடேறாது: செந்தில் பாலாஜி

தி.மு.க., அரசு மீது அவதுாறு பரப்பும் எண்ணம் ஈடேறாது: செந்தில் பாலாஜி

தி.மு.க., அரசு மீது அவதுாறு பரப்பும் எண்ணம் ஈடேறாது: செந்தில் பாலாஜி


ADDED : மார் 20, 2025 12:44 AM

Google News

ADDED : மார் 20, 2025 12:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:சட்டசபையில், பா.ஜ., வானதி, ''டாஸ்மாக்கை மூடுவதாக அறிவித்து, இப்போது படிப்படியாக மது விற்பனைக்கு அனுமதி அளிக்கிறீர்களே'' எனக் கேட்டதற்கு, ''தி.மு.க., அரசின் கடந்த நான்காண்டு கால சாதனைகளை பொறுத்துக் கொள்ள முடியாமல், மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும்; அவப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என, ஒரு அரசியல் கட்சி பூதக்கண்ணாடி போட்டு தேடிப் பார்த்தது; ஒன்றும் கிடைக்கவில்லை. சாட்டையால்கூட அடித்துக் கொண்டனர். கடைசியாக அமலாக்கத் துறையை கொண்டு, அந்த துறைக்கே சம்பந்தம் இல்லாதவர் இடங்களில் எல்லாம் சோதனை மேற்கொண்டனர்.

''தி.மு.க., அரசு மீது, அவதுாறு பரப்ப வேண்டும்; மக்களிடம் தீய கருத்தை பரப்ப வேண்டும் என்ற, அவர்களின் குறுகிய எண்ணம் ஒருபோதும் ஈடேறாது. அவர்கள் சொல்லும் கணக்கு, மனக் கணக்கு. கடந்த 2021 சட்டசபை தேர்தலின்போது, டாஸ்மாக் குறித்து எந்த வாக்குறுதியும் தி.மு.க., அளிக்கவில்லை. ஆனாலும், மக்கள் நலன் கருதி, 603 மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன,'' என, அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலளித்தார்.






      Dinamalar
      Follow us